Quick news in Tamil Nadu

மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா?

Lok Sabha 2019: தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்குவதற்கு அதிமுக முன்வந்துள்ளது. அதுவும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தான் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பதால் மயிலாடுதுறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு

Vijayakanth: தனது சிகிச்சை நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விஜயகாந்த் பூரண நலம் பெற்று வரும் இந்த சமயத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தேர்வு

Puducherry: திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது . புதுவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தத் தொகுதியின் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிகளின் விதிமுறைகள் தற்போதைய எம்எல்ஏக்கள் யாரும் போட்டியிடகூடாது என்பதுதான் இருப்பினும் விதிகளில் தளர்வு செய்து இவரை போட்டியிடுவார் எனவும் தெரிகிறது

Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

Puducherry News in Tamil: தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலனுக்காக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 39 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கிரண் பேடியின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்து பேசினார்.பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தங்களது கோரிக்கைகளுக்கு கிரண் பேடி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதனால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.

Pulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்

Pulwama Terror Attack : தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “காரில் 360 கிலோ வெடி பொருட்களுடன் ஒருவன் வந்து மோதும் அளவிற்கு ராணுவ வீரர்கள் பயணித்த இடத்தில் ஒரு சோதனை சாவடி கூட இல்லையா? இந்தியாவில் பாதுகாப்பு படையினருகே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தால் பதட்டமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.



Lok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்

Lok Sabha 2019 TMC News : திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், “தமாகாவின் பலத்தை அங்கீகரிக்க கூடிய கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறினார். மேலும் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தன் அனுதாபங்களை தெரிவித்த அவர், இரண்டாண்டு ஆட்சியில் அதிமுக அரசு நிறைய மக்கள் நல பணிகள் செய்துள்ளதாகவும் நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Lok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலை பாஜகவோடு கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது, கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படும் இந்த தருணத்திலும் பாஜகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து எனவும், அது அதிமுகவின் நிலைப்பாடு இல்லை எனவும் கூறிப்பிட்டுள்ளார்.


Lok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக -அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “பாஜக உடன் கூட்டணி வைப்பதில் அதிமுக கட்சியினருக்கு உள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. தங்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்கிற பயத்தில் பாஜக அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணியவைத்துவிட முயற்சி செய்து வருகிறது” என்றார்.

Puducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி

Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி பேசியதாவது புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடுவது சரி அல்ல என்றார். புதுச்சேரியில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கிரண்பேடியை மோடி தூண்டிவிடுகிறார் என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? தமிழில் பேச வேண்டும், திருக்குறளை மேற்கோள் காட்ட வேண்டுமென தெரிந்த பிரதமருக்கு இந்த மரபு தெரியாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

“நாம வாழணும்னா யாரை வேணாலும் எப்போ வேணாலும் கொல்லலாம்” என்று நடிகர் அஜித் பேசிய ஒரு வசனம் மிகவும் பிரபலம். ஒற்றை வரியில் சொல்லப்போனால் அந்த வசனம் தான் PUBG Mobile கேம். யார் எங்கு இருந்து எப்பொழுது சுடுவார்கள் என்று தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தன்னையோ தன் குழுவையோ நோக்கி வரும் அத்துணை ஆபத்துகளையும் கடந்து கடைசியில் உயிருடன் நிற்க வேண்டும். எந்த வினாடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்த விளையாட்டின் சஸ்பென்சே இக்கால இளசுகளை கட்டி போட்டுள்ளது.

வேடிக்கைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் விளையாட ஆரம்பித்து, பிரதமர் கலந்து கொண்ட மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில்; “என் மகன் எப்போதும் pubg விளையாடிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவனுடைய படிப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன தீர்வு?” என்று ஒரு மாணவனின் தாய் பிரதமரிடமே கேட்கும் அளவிற்கு நாட்டின் இள வயதினரின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த PUBG Mobile கேம்.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

படிப்பு பாதிக்கப்படுவது நேரம் வீணாக்கப்படுவது போன்ற வழக்கமான பிரச்சனைகளை தவிர உளவியல் ரீதியாகவும் பல அபாயமான விளைவுகளை இந்த கேம் விளைவிக்கக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். “அவனை கொல்லு; சுட்டு தள்ளு; கத்தியால் குத்து” போன்ற வசனங்களை இந்த கேம் விளையாடுபவர்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்கலாம். இது நாளடைவில் ஒருவரின் மனதில் மனிதாபிமானத்திற்கான இடத்தை குறைத்து வன்முறையை விதைக்கிறது.

விளையாட்டிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான கோடு மங்கிப்போகிறது. இதன் விளைவாக சுற்றி இருப்பவர்களின் மீது எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கை ஓங்குவது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற நடத்தை மாறுதல்கள் ஏற்படுகின்றன. டெல்லியில் PUBG Mobile Game விளையாட விடாமல் பெற்றோர்கள் தடுத்ததால் தன் குடும்பத்தையே கல்லூரி மாணவன் ஒருவன் கொலை செய்த செய்தி நாட்டையே உலுக்கியது.

பல கதைகளில் ஒரு கதை:

சூரஜ்(19) என்பவர் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் டெல்லியில் வசித்து வந்துள்ளார். படிப்பில் ஆர்வமில்லாத அவர் தனியே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து கல்லூரிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் PUBG Mobile Game விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது தெரியவந்த அவரது பெற்றோர் அவரை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த சூரஜ் ஒருநாள் இரவோடு இரவாக தனது பெற்றோர் மற்றும் தங்கையை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொன்றுள்ளார்.

இது பற்றி அவரது உறவினர்களிடம் விசாரித்த பொழுது, “இயற்கையில் சூரஜ் அமைதியான குணம் கொண்டவர் என்றும் நாளடைவில் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் அடிக்கடி அவர்களது வீட்டில் கூச்சலும் குழப்பமுமாக இருந்து வந்தது” என்றும் கூறினர்.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

இந்த விளையாட்டு கொண்டு வரும் விபரீதங்கள் பற்றி புரிந்து சீனா இந்த விளையாட்டை தடை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள முதன்மையான தனியார் கல்லூரிகளில் ஒன்றும் இந்த விளையாட்டை தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரமயமாகி கொண்டிருக்கும் இவ்வுலகில் மனிதாபிமானம் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது. நிஜ வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தான் விளையாட்டுகள் தோன்றின. ஆனால் தற்போது அத்தகைய ஒரு விளையாட்டே குற்றங்களுக்கான காரணியாக மாறிப்போயிருப்பது மனித மனங்கள் எவ்வளவு வலுவிழந்து போய்விட்டன என்பதை விளக்குகிறது.

ஒரு விளையாட்டிற்காக தனது சொந்தங்களையும் சுற்றத்தாரையும் ஒருவன் வெறுப்பானேயானால் அப்படி ஒரு விளையாட்டு தேவையா? யோசித்து பார்க்க வேண்டும் இளைய தலைமுறை.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. இதனிடையே அந்த ஆணையம் தங்களது மருத்துவமனைக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் படி நடந்து கொள்வதால் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்லோ மருத்துவ குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதை விசாரித்த நீதிபதிகள் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததோடு வருகின்ற 15ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்

மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்திற்கு மேலும் இரண்டு தேர்தல் அதிகாரிகளாக பாலாஜி மற்றும் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே ஒரு தலைமை தேர்தல் அதிகாரியும் இரண்டு இணை தேர்தல் அதிகாரிகளும் உள்ளது குறிப்பிடதக்கது. இவர்களது பணிகாலம் ஓராண்டாக நிர்ணயிக்கபட்டுள்ளது, பண பட்டுவாடா போன்ற நிகழ்வுகளை தடுக்க முயற்சிக்கும் என தெரிகிறது,

ட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி!

2015 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ட்விட்டரில் இணைந்த பின் அவருடைய அரசியல் வாழ்க்கை ஏறுமுகம் கண்டுள்ளது என்றே சொல்லலாம். எதிர் கட்சிகளின் ஒவ்வொரு செய்கையையும் விமர்சித்து சிறிது கிண்டலாக அவர் போடும் டிவீட்களும், சரமாரியாக கேட்கும் கேள்விகளும் ஊடகங்களின் பார்வையை அவர்மீது திருப்பியது. இதையடுத்து உத்தர பிரதேசத்தில் தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் தனக்கென ஒரு ட்விட்டர் பக்கத்தை இன்று தொடங்கினர். 15 நிமிடங்களில் 5000 பேர் அவரை பின்தொடர்ந்தனர். ட்விட்டர் என்ட்ரி அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மோடி பாகிஸ்தான் பிரதமர் போல செயல்படுகிறார் – அரவிந்த் கெஜ்ரிவால்

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்பொழுது பேசிய கெஜ்ரிவால், “சி பி ஐ போலீசாரை தன் கைக்குள் வைத்துக்கொண்டு பா ஜ க ஆட்சியில் அல்லாத மாநிலங்களிடம் பாகிஸ்தான் பிரதமர் போல மோடி நடந்து கொள்கிறார்” என்று கூறினார்

ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் – பெரம்பூரில் தினகரன் பேசுகிறார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 24ஆம் தேதி சென்னை பெரம்பூரில் மாலை 4 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதில் ஏழை எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை தினகரன் வழங்குகிறார்.

புழல் ஏரியில் நச்சு கலந்திருப்பதாக தகவல்- ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான புழல் ஏரியில் உள்ள தண்ணீரில் மனித உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுக்கள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் . சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பை உடனடியாக தடுக்கா விட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் ஏற்படக்கூடும்.

தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் பற்றிய அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

தொழில் துறை:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
  • முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு.
  • குறு, சிறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு.

மின்சார துறை:

  • கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்:

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு.

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled – தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
  • புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
  • Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
  • கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
  • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
  • கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

Tamil Nadu Budget 2019-Transportation2019: 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • நெடுஞ்சாலை துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1142 கோடி செலவில் 1986 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் இந்த
    மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
  • இனி வரும் நாட்களில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரை 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.
  • மீனம்பாக்கம்-வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
  • 256 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 726.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை,கோவை மற்றும் மதுரையில் 500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
  • ஜெர்மன் கடனுதவியுடன் 12,000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்.

Tamil Nadu Budget 2019: Transportation – தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் – தமிழக பட்ஜெட் 2019

2019 மற்றும் 2020ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு

2019 மற்றும் 2020ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 2681 கோடியும் காவல்துறைக்கு 8084 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019-20 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

Tamil Nadu Budget 2019: மத்திய அரசு 2018-2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் வகையில் பல அம்சங்களை கொண்டிருந்த பா ஜ க அரசின் அந்த பட்ஜெட், எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்று சிலரும்; நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி அரசு கையாண்டுள்ள தந்திரம் இது என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக அரசு 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அ தி மு க – பா ஜ க கூட்டணி குறித்த சாதகமான சூழலே நிலவி வருகிறது. இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆதலால் இதன் மீதான தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த, “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியது, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசலை 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக மாற்றியது, மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூபாய் 1001 கோடி ஒதுக்கியது, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 755-ல் இருந்து 900 ஆக உயர்த்தப்பட்டது, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 875-ல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டது, வேளான் துறைக்கு 1680 கோடி ஒதுக்கியது, விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூபாய் 7000 கோடி ஒதுக்கியது” முதலிய அம்சங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

இதையடுத்து இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயிகளையும் இளைஞர்களையும் கவரும் அம்சங்கள் நிறைய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் விவசாய கடன் மற்றும் அதற்கான வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம். அதேபோல இளைஞர்களின் வேலையின்மையும் நாட்டின் விவாத பொருளாக இருந்து வருவதால் அது சார்ந்து ஏதேனும் அம்சம் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

சமீபத்திய நாட்களில் கல்வி மேம்பாட்டிற்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாநிலத்தின் ஐந்தில் ஒரு பங்கு நிதி கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியின் மீதான மக்களின் கல்வி மேம்பாடு சார்ந்த நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி மேம்பாடு சார்ந்த அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

முந்தைய பட்ஜெட்டில் சுகாதார துறைக்காக 10,158 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அதில் கணிசமான ஏற்றம் இருக்கலாம். அது தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்து விற்பனை கடைகள் ஆகியன புதிதாக ஏற்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் இடம் பெறலாம்.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

மொத்தத்தில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அ தி மு க சந்திக்க போகும் முதல் மக்களவை தேர்தல் மிக அருகில் உள்ளது. அதில் பெறப்போகும் வெற்றி இடங்களின் எண்ணிக்கை கட்சியின் வலிமையை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சமர்பிக்கப்படப்போகும் இந்த பட்ஜெட் அ தி மு க அரசின் வெற்றி வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஆளும் அரசும் உணர்ந்திருக்கும். இதை கணக்கில் கொண்டு தான் பட்ஜெட்டின் அம்சங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தி செய்யப்படும் என்றே தோன்றுகிறது. துறைகளுக்கான நிதியும் மக்களுக்கான திட்டங்களும் போன முறையை விட இம்முறை கணிசமாக கூடியே இருக்கும். நிறைவடையா விடினும் குறை சொல்வதற்கு இல்லாமல் இருந்தால் அதுவே போதும்.

Tamil Nadu Budget 2019: Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

Tamil Nadu Budget 2019: இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்

2019 – 20ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார. தமிழக துணைமுதல்வரும், நிதியமைச்சருமான பன்னீா் செல்வம் காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

தேமுதிக கூட்டணி அமைக்கும் இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் பேட்டி

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் எனவும் சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து எதிர்கொள்வதாக நாங்கள் முடிவு செயதுள்ளோம் என்றும் அவர் கூறினார். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும், நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை பொறுத்த வரையில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அனைவரும் வருக கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு

பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது. இந்த தருணத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வகிக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக அமமுகவை தவிர எந்த கட்சியாக இருந்தாலும் எங்களோடு கூட்டணி சேரலாம் என அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகான அழைப்பு விடுப்பதாக இன்றைய செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.

நாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேர்தலில் போட்டியிடுவதற்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பின் கோரிக்கைகளை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பில் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் வழங்க இயலாது என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

5 வகுப்பிற்கும் 8 வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள்

செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார் அதுபோல 11ஆம் வகுப்பிற்க்கு ஏற்கனவே பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த அதிரடி அறிவிப்பு ஐந்தாம் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்பிற்கும் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வு வைக்கப்படும். அது பொதுவாகவே கருதப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதனால் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் இதனை கல்வியாளர்கள் வரவேற்கிறார்கள். அடிப்படை வகுப்புகளிலிருந்து நன்றாக படித்தால் நீட் தேர்வு போன்ற நுழைவுத்தேர்வுகளை எளிதில் கடந்துவிடலாம் எனக் கூறுகிறார்கள்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர்

தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான அதிமுக, 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்த வரை கட்சியின் நிலைபாடுகள் தொடர்பான கருத்துகளை அவர் மட்டுமே தெரிவிப்பார், அதே நிலைதான் எம்.ஜி.ஆர் காலத்திலும் இருந்தது.

ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொரு நிர்வாகிகளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தனது சொந்த கருத்துகள் குறித்தும் வெளிப்படையாக சொல்லிவருகிறார்கள். இதற்கு காரணம் ஒற்றை தலைமை இல்லாத நிலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், கட்சி பிளவுகளுக்கு பின்னர் இப்போது தான் கட்சி ஒன்று பட்டு செயல் படுகிறது. அதிலும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற சிலர் திரும்பி வராத சூழல் தான் நீடிக்கிறது.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

இந்த வேளையில் கட்சிக்காரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்க இயலாது, அப்படி அவர்கள் ஏதேனும் சொன்னால் ஜனநாயகமில்லாத கட்சி என்று அந்த கட்சி காரர்களே கருத்து கூறும் அளவிற்கு சுதந்திரமிகுந்த கட்சியாகவே திகழ்கிறது.

பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தம்பிதுரை:

பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. இது குறித்த பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி ‘’ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் “ என்றார், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் பாஜக இம்முறை வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.

டெல்லி தலைமை அதிமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுவதை நம்மால் பார்க்க முடியும். ‘’ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் கூறினார். மேலும் அமைச்சர் பேசும் போது கூட்டணிக்கான வாய்ப்புள்ள தொனியில் தான் பேசிவருகிறார்கள் ஆனால் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது:

துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சித்து வருகிறார், அவரது கட்சி தலைமை வேறாகவும், இவர் கூறும் கருத்துகள் வேறாகவும் உள்ளதால் கட்சிக்குள் சரியான புரிதல் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட பட்ஜெட் பற்றி நல்லவிதமாக முதல்வரும் சில அமைச்சர்களும் கூறிய நிலையில் தம்பிதுரை இந்த பட்ஜெட் எந்த வகையிலும் தமிழகத்துக்கு பலன் அளிக்காது எனவும் இந்த பட்ஜெட் பாஜக வின் தேர்தல் அறிக்கை போல் இருப்பதாகவும் கூறினார், தம்பிதுரை கூறும் அனைத்து கருத்துகளும் அவரது சொந்த கருத்துகள் தான் எனவும் அதிமுக கட்சியின் கருத்து கிடையாது எனவும் பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார். மேலும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் மேகதாது, காவிரி விவகாரம், ஜி.எஸ்.டி பண மதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளில் பாஜகவின் கட்சி செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.

கஜா புயலில் முழு இழப்பிடு தொகை தராதது குறித்தும், பட்ஜெட்டில் ஆண்டு வருவாய் ரூபாய் 5 லட்சம் மிகாமல் இருந்தால் வரி கட்ட வேண்டாம் என்பதை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக பாஜகவை விமர்சித்து வருகிறார் தம்பிதுரை. ஆனால் மாநில நலனுக்காக நாங்கள் இணக்கமான சூழலை கடைபிடிக்கிறோம் என முதல்வர் கூறி வருகிறார்.

தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரைக்கு பாஜகவோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லாத போதிலும் கட்சி பிரதிநிதிகள் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்புவது போலவும் தெரிகிறது,

அதிமுகவோடு பாஜக கூட்டணி அமையுமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

ரஜினி , திருமாவளவன் திருநாவுக்கரசர் சந்திப்பு

வருகின்ற மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அண்மையில் திருமாவளவன் ரஜினிகாந்த் ஆகியோர் திருநாவுக்கரசரின் இல்லத்திற்கு வந்து அவரை நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த ரஜினி தனது படங்களில் பிசியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் திமுகவோடு இணக்கமான சூழலில் இருக்கும் தருணத்தில் ரஜினி அவர்களை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமிர்த்தமான சந்ததிப்பு எனவே கூறப்படுகிறது.

கருப்புக் கொடி காட்ட வைகோ அழைப்பு

பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வைகோ ” தேர்தல் பிரசாரம் செய்வது அவரவர் உரிமை, ஆனால் அரசு விழாவில் மோடி பங்குகொள்ளவது ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த ஒரு பிரதமரை அரசு விழாவில் பங்கேற்க விடாமல் கருப்பு கொடி காட்ட வைகோ அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம்

தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர்க்கான 14 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பம் பெற படுகிறது என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அதில் அதிகம் பட்டப் படிப்பு முடித்தவர்கள் என்பதே அதிர்ச்சி தகவல். அதிலும் பி.காம், பி.எஸ்.சி, எம்.காம், எம்.டெக், என்ஜீனீயர் என தெரிகிறது. அரசு வேலையில் சேரும் ஆர்வம் இன்னும் குறையவில்லை, அது தவறு அல்ல, அதற்காக துப்பரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பித்திருப்பது வருத்தமளிக்கும் தகவலாக உள்ளது.

மக்களவைத் தேர்தல் – தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆறு குழுக்கள் அமைப்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடன் எச் வசந்த் குமார், கே ஜெயக்குமார், எம் விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியில் தேர்தல் குழு, ஒருங்கிணைப்புக் குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் நிர்வாகக்குழு ஆகி ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடி – தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை பாஜக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்தபோது கோ பேக் மோடி என்ற hashtag ட்ரெண்டிங் ஆனது. ஆனால் இந்த முறை தமிழக மக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று கூறும் மு க ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியாக உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது இறுதி முடிவு எடுத்தவுடன் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ் அமைப்புகளுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிலும் பெண்களுக்கு 20 தொகுதிகள் ஓதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது தற்போது வரவேற்க பட்டாலும் தேர்தலில் எப்படிபட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெண் வேட்பாளரை களமிறக்கியும் வாக்கு ரீதியான வெற்றி கிடைக்கவில்லை.

டாஸ்மாக் மது கடை – மதுரை நீதிமன்றம் அறிவுரை

வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தின் பண வரவில் பெரும் பகுதி மதுக்கடைகளிலிருந்தே வருகிறது. மக்களின் நலனைக் குலைக்கும் மதுவை நம்பி இல்லாமல் வேறு வழிகளில் வரவை அதிகரிக்க முயற்சிக்குமாறு அரசை நீதிமன்றம் சாடியுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது

கடந்த மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை தனித்து நின்று வென்றது அதிமுக, அதற்கு அவர்களது தேர்தல் அறிக்கையும் ஒரு காரணம். கச்சத்தீவில் இருந்து மீனவர் நலன், மாணவர் நலன் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன. அதுபோல வரும் மக்களவை தேர்தலிலும் சிறப்பான வெற்றியை நோக்கி அந்த கட்சியின் ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதற்காக குழு ஒன்றை அறிவித்துள்ளனர். அதில் மூத்த கட்சி நிர்வாகிகளான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன்,அமைச்சர் ஜெயக்குமார், சண்முகம், மனோஜ் பாண்டியன், மற்றும் முன்னால் எம்.பி ரவி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னை மாற்றுவதற்கான முழு உரிமையும் ராகுல் காந்திக்கு உண்டு – திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பதவி விலகி புதிய தலைவராக கே எஸ் அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து நன்றியை தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் சோனியா ராகுல்காந்தி தலைமையில் சேர்ந்தேன். அதன்பிறகு அகில இந்திய செயலாளராக கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைத் தந்தார். பின்னர் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக பணியாற்றக்கூடிய வாய்ப்பைக் கொடுத்தார். சுமார் இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றி 30,000 பேரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளோம். 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உறுப்பினர்களை ஏற்படுத்தியுள்ளோம். பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் ஊழலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். மக்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு தொடர்ந்து பாடுபட்டோம். என்னை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக அறிவித்தது ராகுல் காந்திதான். என்னை மாற்றுவதற்கான முழு உரிமையும் அவருக்கு உள்ளது. என்னை மாற்றுவதற்கு முன்பே என்னிடம் தகவல் கூறப்பட்டது என்று கூறினார்.