Puducherry News in Tamil: தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Naryanasamy withdraws six day protest

Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலனுக்காக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 39 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கிரண் பேடியின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்து பேசினார்.பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தங்களது கோரிக்கைகளுக்கு கிரண் பேடி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதனால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.