மோடி பாகிஸ்தான் பிரதமர் போல செயல்படுகிறார் – அரவிந்த் கெஜ்ரிவால்

Delhi Chief Minister Arvind Kejriwal

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்பொழுது பேசிய கெஜ்ரிவால், “சி பி ஐ போலீசாரை தன் கைக்குள் வைத்துக்கொண்டு பா ஜ க ஆட்சியில் அல்லாத மாநிலங்களிடம் பாகிஸ்தான் பிரதமர் போல மோடி நடந்து கொள்கிறார்” என்று கூறினார்