Breaking news in Tamil Nadu

மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா?

Lok Sabha 2019: தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்குவதற்கு அதிமுக முன்வந்துள்ளது. அதுவும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தான் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பதால் மயிலாடுதுறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.

Sterlite Verdict: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு கடந்து வந்த பாதை

Thoothukudi Sterlite Verdict : கடந்த ஆண்டு மே மாதம் “முத்து நகரம்” என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் போர்க்களமானது. அங்கு இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின்  தாமிர(காப்பர்) உருக்கு  நிறுவனமான ஸ்டெர்லைட்டின் விரிவாக்கத்தை எதிர்த்தும் அதை  நிரந்தரமாக மூட கூறியும்  மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் மாசு மற்றும் சுத்தீகரிக்கப்படாத கழிவு நீரால் கேன்சர் உருவாகிறது, அங்கு வேலை செய்பவர்களுக்கு முறையான தற்காப்பு வசதிகள் இல்லை, கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் அரசின் சட்ட திட்டங்கள் மீறப்படுகிறது என்று பொது மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அதனை முற்றிலுமாக மறுத்த வேதாந்தா குழுமம், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும் அதனால் மக்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் கூறியது.

Journey of Sterlite Plant: ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை

ஆனால் மக்கள் அதை  ஏற்றுக் கொள்ளவில்லை. 100 நாட்களையும் தாண்டி இரவு பகல் பாராமல் போராட்டம் தொடர்ந்தது. நிலைமை நாளுக்கு நாள் கை மீறி போக, தமிழக அரசு தலையிட்டு போராட்டத்திற்கு தடை விதித்தது. சில இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது பொது மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்த, சமூக வலைத்தளங்களில் வேதாந்த குழுமத்திற்கும் அரசிற்கும் எதிராக பெருமளவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசு விதித்த தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட நடத்தப்பட்ட போராட்டத்தில் திடீர் கலவரம் வெடிக்க, போலீசாருக்கும் பொது மக்களுக்கும் நடந்த சண்டையில் போராட்டக்காரர்கள் 13 பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர், 102-க்கும்  மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் மட்டும் அல்லாது வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.

வேறு வலி இல்லாமல் மே 22,2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர்.

தமிழக அரசின் தடையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. அதனை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அவர்கள் அளித்த அறிக்கையின் பெயரில் சில நிபந்தனைகளுடன் வேதாந்தா குழுமம் மீண்டும் ஆலையை திறக்கலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Tuticorin People welcomes Supreme Court order against reopening of Sterlite

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை  மூடப்பட்ட நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், ஒருபுறம், உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் ஆலையை திறக்க தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மறுபுறம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு செய்தது.

இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை நடந்து கொண்டு இருக்கையில், அதற்கிடையே, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆலை பராமரிப்பு பணிக்கு மின்இணைப்பு வழங்க வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியது. இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பதால், பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது  எனவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்றும் கூறி, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை தமிழ்நாடு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த பொழுது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்காமல், ஆலையை திறக்கக் கூடாது என்று உயர் நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 29 ஆம் தேதி வழங்கப்படுமெனவும் கூறியது. ஆனாலும் ஆலையை திறக்கவும் மின்சாரம் வழங்கவும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

Journey of Sterlite Plant: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு கடந்து வந்த பாதை

ஜனவரி 29 ஆம் தேதி விசாரணையின் பொழுது இரண்டு தரப்பிலிருந்தும் அனல் பறக்கும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் மீதான விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இந்த வழக்கு சார்ந்த அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேற்கூறிய இரண்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்குகளை விசாரித்து உத்தரவிட பசுமை தீர்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் ஆலையை திறக்க விதித்த தடை செல்லும் என உத்தரவிடப்பட்டது. மேலும், இது தொடர்பாக இடைக்கால நிவாரணம் தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தூத்துக்குடி வாழ் மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் மக்கள் தங்களுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Journey of Sterlite Plant: ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை

Sterlite Supreme Court Verdict: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை…!

Sterlite Supreme Court Verdict: :ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்பாயத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Pulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்

Pulwama Terror Attack : தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “காரில் 360 கிலோ வெடி பொருட்களுடன் ஒருவன் வந்து மோதும் அளவிற்கு ராணுவ வீரர்கள் பயணித்த இடத்தில் ஒரு சோதனை சாவடி கூட இல்லையா? இந்தியாவில் பாதுகாப்பு படையினருகே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தால் பதட்டமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.



Lok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்

Lok Sabha 2019 TMC News : திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், “தமாகாவின் பலத்தை அங்கீகரிக்க கூடிய கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறினார். மேலும் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தன் அனுதாபங்களை தெரிவித்த அவர், இரண்டாண்டு ஆட்சியில் அதிமுக அரசு நிறைய மக்கள் நல பணிகள் செய்துள்ளதாகவும் நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Sterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை?- நாளை தீர்ப்பு

Thoothukudi Sterlite Verdict : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்ட பின் அதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தீவிர ஆய்வுகளுக்கு பிறகு ஆலையை திறக்கலாம் என்றும் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. வேதாந்தா நிறுவனம் சார்பிலும் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் நாளை தீர்ப்பு வழங்க பட உள்ளது.


Lok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலை பாஜகவோடு கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது, கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படும் இந்த தருணத்திலும் பாஜகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து எனவும், அது அதிமுகவின் நிலைப்பாடு இல்லை எனவும் கூறிப்பிட்டுள்ளார்.


Lok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக -அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “பாஜக உடன் கூட்டணி வைப்பதில் அதிமுக கட்சியினருக்கு உள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. தங்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்கிற பயத்தில் பாஜக அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணியவைத்துவிட முயற்சி செய்து வருகிறது” என்றார்.

Tamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களும் சாலை ஆக்கிரமிப்புகளும் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் புகார் தெரிவிக்க செல்போன் எண்ணை டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 9498181457 என்ற தொலைபேசி எண் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்?

Tamil Nadu Municipal Corporations: தமிழகத்தில் ஓசூர், நாகர்கோயில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12 இல் இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நாகர்கோயில் ஆகியன தென் தமிழகத்தில் அமைந்துள்ளன. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியன கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ளன. திருச்சி, தஞ்சாவூர் ஆகியன மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன. வட தமிழகம் சென்னை, வேலூர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஓசூர் உடன் சேர்த்து மூன்று மாநகராட்சிகளை கொண்டுள்ளது.

Tamil Nadu Hosur, Nagercoil to become corporations

மக்கள் தொகை மற்றும் வருவாயின் அடிப்படையில் தான் மாநகராட்சிகள் உருவாக்கப்படும். பெரும்பாலான தென் மாவட்ட மாநாகராட்சிகளின் பிரதான தொழில் மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி மற்றும் அவை சார்ந்த சந்தை படுத்துதலே ஆகும். வட மண்டலங்களான சென்னை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கில் தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் இறைந்து கிடக்கின்றன. மக்கள் தொகையிலும் வட மண்டலமே முன்னிலையில் உள்ளது. அப்படி இருக்கையில் மாநகராட்சி உருவாக்கத்தில் வட மண்டலத்தை விட்டுவிட்டு எந்த அடிப்படையில் அரசு தென் மண்டலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று மக்களிடையே முணுமுணுப்பு காணப்படுகிறது.

Hosur and Nagercoil to be municipal corporations

1998 ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் கடந்த மாதம் விளையாட்டு துறை அமைச்சரும் ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அதிமுகவை சேர்ந்த பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்ததும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதும் அனைவரும் அறிந்ததே. மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சம்பவம் ஓசூர் மீதான அதிமுகவின் பிடிப்பை சற்று குறைத்துவிட்டது என்றே சொல்லலாம். அதனை சரிக்கட்ட தான் தற்பொழுது ஓசூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இது முழுக்க முழுக்க தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்றும் கருத்துக்கள் நிலவுகிறது.

Nagercoil, Hosur municipalities set to become municipal corporations

ஓசூருடன் சேர்த்து பார்த்தாலும் வட மண்டலத்தில் உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை மூன்று தான். இங்கும் அரசுக்கு அதிக அளவு வரிவருவாய் தந்து கொண்டிருக்கிற நகராட்சிகள் பல உள்ளன. தென் திசையிலேயே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு வட திசையையையும் அரசு சற்று பார்த்தல் நன்றாக இருக்கும் என்பதே அங்குள்ள மக்களின் ஆதங்கமாக உள்ளது.

Tamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்? : Nagercoil, Hosur to be upgraded as corporations

17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி

நேற்று குஜராத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,” மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளுக்கு பாஜக அறிவித்துள்ள ஒரு நாளுக்கு 17 ரூபாய் நிதியை விட அதிக நிதி வழங்குவோம்” என்று கூறினார். மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, 15 தொழில் அதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் கூறினார்.

AAP Delhi Breaking News: டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் – ஓர் சிறப்பு பார்வை

AAP Delhi Breaking News:எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மோடி அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்துவது வாடிக்கையாகி விட்டது

சில மாதங்களுக்கு முன்பு அனைத்து எதிர்கட்சிகளையும் கூட்டி பொதுக்கூட்டம் ஒன்றை ராகுல் காந்தி நடத்தினார்.

அதையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜீ 22 எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் தானும் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த போவதாக கூறினார்.

அதன்படி டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மம்தாவின் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தி மு க எம் பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜீ, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ம.ஜ.த தேசிய தலைவர் தேவ கவுடா, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

மம்தா பானர்ஜீ பேசுகையில், “பா ஜ க ஆட்சியில் டெமோகிரசி மோடிகிரசி ஆகிவிட்டது. இன்று தான் மக்களவையில் மோடிக்கு கடைசி நாள். இன்னும் 20 நாட்கள் தான்; அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியாது. மேற்கு வங்கத்தில் என்ன முயற்சிகள் செய்தாலும் மோடி அரசு கால்பதிக்க முடியாது. அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெல்லும்.

கண்ணாடியில் உங்களையே பாருங்கள்; ராவணனுக்கும் 56 இன்ச் மார்பு தான் இருந்தது. ஷோலே திரைப்படத்தில் தூங்கிவிடு இல்லை என்றால் கஃபர் சிங்க் வந்துவிடுவான் என்றொரு வசனம் உண்டு. இந்தியாவிற்கு மோடி தான் கஃபர் சிங். அவரை வைத்து தான் அந்த வசனம் ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தற்பொழுது சொல்லப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “ மோடி ஜி நீங்கள் இந்தியாவின் பிரதமர். பாகிஸ்தானிற்கு அல்ல. எந்த இந்திய பிரதமராவது டெல்லியையும் கொல்கத்தாவையும் பாதிப்பிற்குள்ளாக்க நினைப்பாரா?” என்று கூறினார்.

பரூக் அப்துல்லா பேசுகையில், “கடவுள் ராமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கு மட்டும் தான் சொந்தமானவரா? அவர் அனைவருக்கும் பொதுவானவர். உங்கள் மறைவிற்கு பின் நீங்கள் அவரிடம் செல்லும் பொழுது அவர் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் மோடி அரசுக்கு எதிராக இவ்வாறு எதிர்க்கட்சிகள் கை கோர்த்திருப்பது பா ஜ க அரசிற்கு சருக்கலாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், ரபேல் விமான கொள்முதல், விவசாயிகள் பிரச்சனை என எதிர்க்கட்சிகளின் வாயில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மோடி அரசுக்கு இது இன்னொரு பாரமே

ஆம் ஆத்மி பார்ட்டி சார்பில் டெல்லியில் டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

AAP Rally In Delhi News: கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த சோனியா, ராகுல்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பேரணியில் தேசிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அங்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். திராவிட முன்னேற்றக் கழக சார்பில் கனிமொழி எம்பி நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இது மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னோட்டமாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? தமிழில் பேச வேண்டும், திருக்குறளை மேற்கோள் காட்ட வேண்டுமென தெரிந்த பிரதமருக்கு இந்த மரபு தெரியாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. இதனிடையே அந்த ஆணையம் தங்களது மருத்துவமனைக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் படி நடந்து கொள்வதால் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்லோ மருத்துவ குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதை விசாரித்த நீதிபதிகள் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததோடு வருகின்ற 15ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்

மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்திற்கு மேலும் இரண்டு தேர்தல் அதிகாரிகளாக பாலாஜி மற்றும் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே ஒரு தலைமை தேர்தல் அதிகாரியும் இரண்டு இணை தேர்தல் அதிகாரிகளும் உள்ளது குறிப்பிடதக்கது. இவர்களது பணிகாலம் ஓராண்டாக நிர்ணயிக்கபட்டுள்ளது, பண பட்டுவாடா போன்ற நிகழ்வுகளை தடுக்க முயற்சிக்கும் என தெரிகிறது,

ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் – பெரம்பூரில் தினகரன் பேசுகிறார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 24ஆம் தேதி சென்னை பெரம்பூரில் மாலை 4 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதில் ஏழை எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை தினகரன் வழங்குகிறார்.

புழல் ஏரியில் நச்சு கலந்திருப்பதாக தகவல்- ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான புழல் ஏரியில் உள்ள தண்ணீரில் மனித உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுக்கள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் . சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பை உடனடியாக தடுக்கா விட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் ஏற்படக்கூடும்.

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை ஒட்டி இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தமிழகத்திற்கு வரும் அவர் திருப்பூரில் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாது பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க இருக்கிறார் . அதில் சென்னை டி எம் எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்? – மோடி கேள்வி

தமிழகம் வந்த பிரதமர் மோடி திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “கலப்பட மருந்தை போன்று ஆபத்தானது கலப்பட கூட்டணி. எதிர்க்கட்சிகளின் கலப்படமான கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள். என்னை தோற்கடிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் திருப்பத்தை எற்படுத்துமா திருப்பூர் வருகை ?

மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு திருப்பூர் பிரச்சாரம் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று திருப்பூர் வருகிறார். அதோடு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மோடி..

மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரதமர் கோவை வந்தடைகிறார்.. பின் 3.05 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்கிறார்.

அரசு விழாவில் டிஎம்ஸ்-வண்ணாரபேட்டை வழிதடத்தில் மெட்ரோ சேவை, விமான நிலைய புனரமைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சபாநாயகர் தனபால் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

அதன் பின்னர் 3.25 மணிக்கு பாஜக பொது கூட்டம் நடைபெறும் பெருமாநல்லூர் வருகிறார். அங்கு மாபெரும் பொதுகூட்ட மேடை அமைக்கபட்டுள்ளது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி பிரமுகா்கள் கலந்துகொள்ள உள்ளனா். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். பின் 5.10 மணிக்கு புறப்பட்டு பிரதமர் மோடி கோவை வழியாக கர்நாடகா செல்வார் என தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் தமிழக பாஜக தலைவர் கூறுவகையில் மோடி தமிழகம் வருவதால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் மோடி சுற்றுபயணம் மெற்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் தமிழகம் வருவதையொட்டி டிவிட்டரில் ‘’GO BACK MODI” மீண்டும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடதக்கது.

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை ஒட்டி இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தமிழகத்திற்கு வரும் அவர் திருப்பூரில் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாது பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க இருக்கிறார் . அதில் சென்னை டி எம் எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை குறிப்பிடத்தக்கது.

தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் பற்றிய அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

தொழில் துறை:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
  • முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு.
  • குறு, சிறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு.

மின்சார துறை:

  • கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்:

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு.

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled – தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
  • புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
  • Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
  • கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
  • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
  • கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

Tamil Nadu Budget 2019-Transportation2019: 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • நெடுஞ்சாலை துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1142 கோடி செலவில் 1986 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் இந்த
    மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
  • இனி வரும் நாட்களில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரை 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.
  • மீனம்பாக்கம்-வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
  • 256 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 726.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை,கோவை மற்றும் மதுரையில் 500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
  • ஜெர்மன் கடனுதவியுடன் 12,000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்.

Tamil Nadu Budget 2019: Transportation – தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் – தமிழக பட்ஜெட் 2019

2019 மற்றும் 2020ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு

2019 மற்றும் 2020ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 2681 கோடியும் காவல்துறைக்கு 8084 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019-20 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

Tamil Nadu Budget 2019: மத்திய அரசு 2018-2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் வகையில் பல அம்சங்களை கொண்டிருந்த பா ஜ க அரசின் அந்த பட்ஜெட், எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்று சிலரும்; நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி அரசு கையாண்டுள்ள தந்திரம் இது என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக அரசு 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அ தி மு க – பா ஜ க கூட்டணி குறித்த சாதகமான சூழலே நிலவி வருகிறது. இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆதலால் இதன் மீதான தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த, “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியது, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசலை 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக மாற்றியது, மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூபாய் 1001 கோடி ஒதுக்கியது, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 755-ல் இருந்து 900 ஆக உயர்த்தப்பட்டது, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 875-ல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டது, வேளான் துறைக்கு 1680 கோடி ஒதுக்கியது, விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூபாய் 7000 கோடி ஒதுக்கியது” முதலிய அம்சங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

இதையடுத்து இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயிகளையும் இளைஞர்களையும் கவரும் அம்சங்கள் நிறைய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் விவசாய கடன் மற்றும் அதற்கான வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம். அதேபோல இளைஞர்களின் வேலையின்மையும் நாட்டின் விவாத பொருளாக இருந்து வருவதால் அது சார்ந்து ஏதேனும் அம்சம் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

சமீபத்திய நாட்களில் கல்வி மேம்பாட்டிற்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாநிலத்தின் ஐந்தில் ஒரு பங்கு நிதி கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியின் மீதான மக்களின் கல்வி மேம்பாடு சார்ந்த நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி மேம்பாடு சார்ந்த அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

முந்தைய பட்ஜெட்டில் சுகாதார துறைக்காக 10,158 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அதில் கணிசமான ஏற்றம் இருக்கலாம். அது தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்து விற்பனை கடைகள் ஆகியன புதிதாக ஏற்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் இடம் பெறலாம்.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

மொத்தத்தில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அ தி மு க சந்திக்க போகும் முதல் மக்களவை தேர்தல் மிக அருகில் உள்ளது. அதில் பெறப்போகும் வெற்றி இடங்களின் எண்ணிக்கை கட்சியின் வலிமையை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சமர்பிக்கப்படப்போகும் இந்த பட்ஜெட் அ தி மு க அரசின் வெற்றி வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஆளும் அரசும் உணர்ந்திருக்கும். இதை கணக்கில் கொண்டு தான் பட்ஜெட்டின் அம்சங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தி செய்யப்படும் என்றே தோன்றுகிறது. துறைகளுக்கான நிதியும் மக்களுக்கான திட்டங்களும் போன முறையை விட இம்முறை கணிசமாக கூடியே இருக்கும். நிறைவடையா விடினும் குறை சொல்வதற்கு இல்லாமல் இருந்தால் அதுவே போதும்.

Tamil Nadu Budget 2019: Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

தேமுதிக கூட்டணி அமைக்கும் இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் பேட்டி

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் எனவும் சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து எதிர்கொள்வதாக நாங்கள் முடிவு செயதுள்ளோம் என்றும் அவர் கூறினார். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும், நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை பொறுத்த வரையில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அனைவரும் வருக கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு

பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது. இந்த தருணத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வகிக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக அமமுகவை தவிர எந்த கட்சியாக இருந்தாலும் எங்களோடு கூட்டணி சேரலாம் என அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகான அழைப்பு விடுப்பதாக இன்றைய செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.

நாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர்

தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான அதிமுக, 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்த வரை கட்சியின் நிலைபாடுகள் தொடர்பான கருத்துகளை அவர் மட்டுமே தெரிவிப்பார், அதே நிலைதான் எம்.ஜி.ஆர் காலத்திலும் இருந்தது.

ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொரு நிர்வாகிகளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தனது சொந்த கருத்துகள் குறித்தும் வெளிப்படையாக சொல்லிவருகிறார்கள். இதற்கு காரணம் ஒற்றை தலைமை இல்லாத நிலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், கட்சி பிளவுகளுக்கு பின்னர் இப்போது தான் கட்சி ஒன்று பட்டு செயல் படுகிறது. அதிலும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற சிலர் திரும்பி வராத சூழல் தான் நீடிக்கிறது.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

இந்த வேளையில் கட்சிக்காரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்க இயலாது, அப்படி அவர்கள் ஏதேனும் சொன்னால் ஜனநாயகமில்லாத கட்சி என்று அந்த கட்சி காரர்களே கருத்து கூறும் அளவிற்கு சுதந்திரமிகுந்த கட்சியாகவே திகழ்கிறது.

பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தம்பிதுரை:

பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. இது குறித்த பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி ‘’ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் “ என்றார், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் பாஜக இம்முறை வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.

டெல்லி தலைமை அதிமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுவதை நம்மால் பார்க்க முடியும். ‘’ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் கூறினார். மேலும் அமைச்சர் பேசும் போது கூட்டணிக்கான வாய்ப்புள்ள தொனியில் தான் பேசிவருகிறார்கள் ஆனால் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது:

துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சித்து வருகிறார், அவரது கட்சி தலைமை வேறாகவும், இவர் கூறும் கருத்துகள் வேறாகவும் உள்ளதால் கட்சிக்குள் சரியான புரிதல் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட பட்ஜெட் பற்றி நல்லவிதமாக முதல்வரும் சில அமைச்சர்களும் கூறிய நிலையில் தம்பிதுரை இந்த பட்ஜெட் எந்த வகையிலும் தமிழகத்துக்கு பலன் அளிக்காது எனவும் இந்த பட்ஜெட் பாஜக வின் தேர்தல் அறிக்கை போல் இருப்பதாகவும் கூறினார், தம்பிதுரை கூறும் அனைத்து கருத்துகளும் அவரது சொந்த கருத்துகள் தான் எனவும் அதிமுக கட்சியின் கருத்து கிடையாது எனவும் பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார். மேலும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் மேகதாது, காவிரி விவகாரம், ஜி.எஸ்.டி பண மதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளில் பாஜகவின் கட்சி செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.

கஜா புயலில் முழு இழப்பிடு தொகை தராதது குறித்தும், பட்ஜெட்டில் ஆண்டு வருவாய் ரூபாய் 5 லட்சம் மிகாமல் இருந்தால் வரி கட்ட வேண்டாம் என்பதை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக பாஜகவை விமர்சித்து வருகிறார் தம்பிதுரை. ஆனால் மாநில நலனுக்காக நாங்கள் இணக்கமான சூழலை கடைபிடிக்கிறோம் என முதல்வர் கூறி வருகிறார்.

தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரைக்கு பாஜகவோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லாத போதிலும் கட்சி பிரதிநிதிகள் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்புவது போலவும் தெரிகிறது,

அதிமுகவோடு பாஜக கூட்டணி அமையுமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

கருப்புக் கொடி காட்ட வைகோ அழைப்பு

பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வைகோ ” தேர்தல் பிரசாரம் செய்வது அவரவர் உரிமை, ஆனால் அரசு விழாவில் மோடி பங்குகொள்ளவது ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த ஒரு பிரதமரை அரசு விழாவில் பங்கேற்க விடாமல் கருப்பு கொடி காட்ட வைகோ அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம்

தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர்க்கான 14 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பம் பெற படுகிறது என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அதில் அதிகம் பட்டப் படிப்பு முடித்தவர்கள் என்பதே அதிர்ச்சி தகவல். அதிலும் பி.காம், பி.எஸ்.சி, எம்.காம், எம்.டெக், என்ஜீனீயர் என தெரிகிறது. அரசு வேலையில் சேரும் ஆர்வம் இன்னும் குறையவில்லை, அது தவறு அல்ல, அதற்காக துப்பரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பித்திருப்பது வருத்தமளிக்கும் தகவலாக உள்ளது.

மக்களவைத் தேர்தல் – தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆறு குழுக்கள் அமைப்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடன் எச் வசந்த் குமார், கே ஜெயக்குமார், எம் விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியில் தேர்தல் குழு, ஒருங்கிணைப்புக் குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் நிர்வாகக்குழு ஆகி ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடி – தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை பாஜக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்தபோது கோ பேக் மோடி என்ற hashtag ட்ரெண்டிங் ஆனது. ஆனால் இந்த முறை தமிழக மக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று கூறும் மு க ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியாக உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது இறுதி முடிவு எடுத்தவுடன் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ் அமைப்புகளுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிலும் பெண்களுக்கு 20 தொகுதிகள் ஓதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது தற்போது வரவேற்க பட்டாலும் தேர்தலில் எப்படிபட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெண் வேட்பாளரை களமிறக்கியும் வாக்கு ரீதியான வெற்றி கிடைக்கவில்லை.

டாஸ்மாக் மது கடை – மதுரை நீதிமன்றம் அறிவுரை

வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தின் பண வரவில் பெரும் பகுதி மதுக்கடைகளிலிருந்தே வருகிறது. மக்களின் நலனைக் குலைக்கும் மதுவை நம்பி இல்லாமல் வேறு வழிகளில் வரவை அதிகரிக்க முயற்சிக்குமாறு அரசை நீதிமன்றம் சாடியுள்ளது.

ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் பேசியதாக கூறினார். மேலும், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை என்று கூறிய அவர், இந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாகவும் கூறினார்.

தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்ற ஓபிஎஸ் மகன்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. இதை அடுத்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். விருப்ப மனு கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு- மத்திய அரசு அனுமதி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட அகழாய்வின் போது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பல அரிய பொருட்கள் கிடைத்தன. இதனிடையே இந்த 5 ஆம் கட்ட அகழாய்வில் மேலும் பல தொல் பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை

திருச்சியில் அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் முத்து தூக்கில் தொங்கியதுடன் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கபட்டார். நேற்று மாலை திருச்சி பெண்கள் சிறை வார்டனாக பணிபுரியும் தமிழ்செல்வியும் தற்கொலை செய்து கொண்டார் இதற்கு அவரது காதல் தோல்வியே காரணம் என கூறப்படுகிறது. இந்த இரு சம்பங்களும் குறித்துட் திருச்சி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பிரெய்லி வாக்காளர் சிலிப்

வரும் மக்களவைத் தேர்தலில் பார்வை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் வாக்களிக்க வசதியாக பிரெய்லி வாக்காளர் சிலிப் அளிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் நடைபெற்ற பேரவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை வரும் மக்களவைத் தேர்தலிலும் அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வசதியாக அமையும்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பலன் இல்லை

தம்பிதுரை குற்றச்சாட்டு மத்திய அரசின் 5 ஆண்டு பட்ஜெட்களில் தமிழகத்துக்கு ஏந்த பலனும் கிடைக்க வில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட் பாஜாகாவின் தேர்தல் அறிக்கைபோல் தான் உள்ளது என்று கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு ” தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளோடு கூட்டணி” என முதல்வர் அறிவித்துள்ளார். என்றார் தம்பிதுரை.

வாஜ்பாய் அறிவித்துள்ள பட்ஜெட் எனக் கூறிய அமைச்சர் சீனிவாசன்

அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் அருமையான பட்ஜெட் என முதல்வர் பாராட்டி உள்ளார்” என்று தவறாக குறிப்பிட்டு உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஒருமுறை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்று அவர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் இந்தியாவிலேயே அதிக தேர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம்

கடந்த ஜனவரி 6ம் தேதி 2019-20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட, நகரங்களில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 17 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதிய நிலையில், 11 ஆயிரத்து 121 பேர் தேர்வாகி உள்ளனர். வெற்றிபெற்றவர்களில் 7 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து படையல் வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி சென்றனர். தனுஷ்கோடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, பவானி கூடுதுறை, திருச்சி அம்மா மண்டபம் ஆகிய இடங்களில் திரளானோர் திதிகொடுத்து, ஏழைகளுக்கு தானங்களை வழங்கினர்.

“என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்” – ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வாக்குமூலம்

“தன் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்”

என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு ராஜேஷ் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ்(25). காஞ்சிபுரம் மாவட்டம் கம்மவார்பாளையம் பகுதியில் தங்கி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி மறைமலை நகர் -சிங்கப்பெருமாள் கோயில் ரயில்நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை தாம்பரம் ரயில்வே போலீஸார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்கை முடித்தனர்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மிகுந்த மன உலைச்சலோடு ராஜேஷ் உருக்கமாக பேசி வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ராஜேஷின் தற்கொலை வாக்குமூலம்!

அதில், “இன்று ( 25 ஆம் தேதி) காலை பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு வழியில் இன்னொரு ஊழியரை ஏற்றிக்கொள்வதற்காக பாடி மேம்பாலம் அருகே சாலை ஓரத்தில் காத்திருந்தேன். அப்போது இரண்டு போலீசார் அங்கு வந்து “வண்டிய இங்க நிறுத்தாத எடுத்துட்டு போ” என்றனர். உடனே அவ்விடத்திலிருந்து கிளம்பி சற்று தொலைவில் ரோட்டின் ஓரமாக வண்டியை நிறுத்தினேன்.

அங்கும் என்னை பின் தொடர்ந்து வந்த அவ்விரண்டு போலீசாரும் காரில் பெண் ஒருவர் இருப்பதை கூட பொருட்படுத்தாது என்னை மிகவும் மோசமான வார்த்தைகளில் தரக்குறைவாக திட்டினர். அவர்களது காக்கி உடைக்கு மரியாதை குடுத்து நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர்கள் அதை காப்பாற்றிக்கொள்ளவில்லை. இதே போல நேற்று திருவொற்றியூரில் ஒரு ஓரமாக சர்வீஸ் ரோட்டில் காரில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன்.

அங்கு வந்த போலீசார் என் வண்டியை லாக் செய்து விட்டு 500 ரூபாய் கொடுத்தால் தான் லாக்கை எடுப்போம் என்றனர். பணத்தை கொடுத்துவிட்டு ரசீது கேட்டதற்கு “எங்களையே எதிர்த்து பேசறயா” என்று கூறி தரக்குறைவாக திட்டினர். எங்கு போனாலும் போலீசாரின் தொல்லை தாங்க முடியவில்லை. போலீசாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி எல்லாம் செய்யலாமா? நீங்கள் வைத்தது தான் சட்டம் என்பது போல நடந்து கொள்கிறீர்கள். அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

என்னைப்போல் ஒரு ஒரு ஓட்டுனரும் தினமும் பல பிரச்சனைகளுக்கு நடுவில் சரியான தூக்கம் கூட இல்லாமல் வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தால் பைன் போடுங்கள் ஆனால் தரக்குறைவாக பேசாதீர்கள். “என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம். என் சாவோடு இது எல்லாம் முடிய வேண்டும்”. மேற்கொண்டு இது போன்று நிகழ்வுகள் நடந்தால் நீங்கள் அனைவரும் வேலையை விட்டு போய்விடுங்கள் மக்களே ஆட்சி செய்யட்டும்” என்று கூறியிருந்தார்.

ஆதாரங்கள் அழிப்பு !

ராஜேஷின் உடலை மீட்ட தாம்பரம் போலீசார் அவரின் உடைமைகளை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது ஒரு செல்போனை மட்டும் தாமதமாக கொடுத்துள்ளனர். அதிலிருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. அதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அந்த செல்போனை ரெக்கவர் செய்து பார்த்த போது “தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராஜேஷ் வீடியோ வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ததும்,கொலைக்கான உண்மை காரணத்தை மறைக்க தாம்பரம் போலீசார் அந்த வீடியோ ஆதாரத்தை அழித்ததும்” தெரிய வந்தது.

ராஜேஷ் தற்கொலை தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான 2 போக்குவரத்து போலீஸாரை அடையாளம் காண தென் சென்னை இணைஆணையர் சி.மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையரும் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோல நடக்காமல் தடுக்கவும், ராஜேஷ் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திரண்டு திருமங்கலம் சிக்னல் மற்றும் போரூர் பகுதிகளில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மாலையில் 150-க்கும் அதிகமான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

மக்களை காப்பாற்ற வேண்டிய போலீசாரே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு ஓட்டுநர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

“என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்” – ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வாக்குமூலம்

டாக்ஸி ஓட்டுநர் ரமேஷ் மரணம் – நடவடிக்கை தேவை திருமாவளவன் கோரிக்கை

காவல் துறையின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற வீடியோ வாக்குமூலம் தந்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார் டாக்ஸி ஓட்டுநர் ரமேஷ். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் யார் என்பதை அறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம் – பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். “தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம். கூட்டணி தொடர்பான அறிவிப்பை அ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அறிவிப்போம்” என்று துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்து திருமண சடங்குகளை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்து திருமண மரபுகள் பற்றி கிண்டலாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “திருமணத்தின் போது மணமக்களை தரையில் உட்கார வைத்து; அந்த மணமக்களின் கண்கள் மட்டும் அல்லாது சுற்றி இருப்பவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரும்படி தீ மூட்டி; தனக்கும் அர்த்தம் தெரியாத, வந்திருப்பவர்களுக்கும் புரியத மந்திரங்களை புரோகிதர் சொல்லிக்கொண்டு இருப்பார்” என்று கூறினார். இது இந்து மதத்தையும், மக்களின் கடவுள் நம்பிக்கையையும் அவமதிப்பது போல் உள்ளது என விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன.

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுகரசர் விடுவிக்கபட்டு புதிய தலைவராக கே.எஸ் அழகிரி என்பவர் நியக்கபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதியேற்ற பின்னர் கட்சியில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், அவரின் உழைப்பால் மூன்று மாநில தேர்தலில் வெற்றி கண்டது காங்கிரஸ். அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தலைவரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா ? வைகோவிற்கு ஹச்.ராஜா சவால்

பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார் வைகோ, அத்தோடு பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹச் ராஜா ”வைகோவால் கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா” சவால் விடுத்துள்ளார்.