17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி

giving-farmers-17-rupees-insult

நேற்று குஜராத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,” மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளுக்கு பாஜக அறிவித்துள்ள ஒரு நாளுக்கு 17 ரூபாய் நிதியை விட அதிக நிதி வழங்குவோம்” என்று கூறினார். மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, 15 தொழில் அதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் கூறினார்.