Tamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்

traffic-violations

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களும் சாலை ஆக்கிரமிப்புகளும் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் புகார் தெரிவிக்க செல்போன் எண்ணை டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 9498181457 என்ற தொலைபேசி எண் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.