தொகுதி பங்கீட்டில் திணறுகிறதா அதிமுக?

OPS, D Jayakumar AIADMK meets Vijayakanth

AIADMK-DMDK: மக்களவை தேர்தலை கூட்டணியோடு சந்திக்கும் வகையில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வருகிறது, இதுவரை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், என்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக அறிவித்து வருகிறது, பாஜகவுக்கு 7 தொகுதிகள், பாமகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகத்துக்கு 1 தொகுதி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கூட்டணி கட்சிகளுக்கு போக தற்போது மீதம் 26 தொகுதிகள் அவர்கள் வசம் உள்ளன.

நிர்பந்திக்கும் தேமுதிக

அதிமுக கூட்டணியில் நிச்சயம் தேமுதிக இணையும் என பாஜக, அதிமுக கட்சி பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக சார்பாக துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர், இருப்பினும் தேமுதிக கூட்டணி உடன்பாடு எட்டப்பட வில்லை. இதற்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருவதே காரணம் என கூறப்படுகிறது. பாமகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாக தகவல்.

சமரசம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக

தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவும் பாஜவும் ஒருமித்த குரலை வெளிபடுத்துகிறது, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதே ஒரே வழி, தற்போது அதிமுக வசம் 26 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுகிறது அதிமுக, ஒரு வேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் சொந்த கட்சி தொண்டர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளதாகவும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதே அதிமுகவின் கருத்து.

6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு?

நிறைவாக தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மோடி தலைமையில் மாபெரும் மாநாடு!

வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறுகிறது, அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார், மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தேமுதிக இணைந்துவிட்டால் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த கூட்டணிக்கு மக்கள் எத்தணை தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்.