D.Jayakumar

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் விரைவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக தயார்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. அந்த 4 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பதே இழுபறிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தரவும் அதிமுக தயாராக உள்ளதாக தகவல்.

இன்று அறிவிக்கப்படுகிறது தேமுதிக அதிமுக கூட்டணி

DMDK: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிச்சயம் இணையும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்றது அதில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இன்று நிச்சயம் அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. தேமுதிகவிற்கு ஐந்து முதல் ஆறு தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி பங்கீட்டில் திணறுகிறதா அதிமுக?

AIADMK-DMDK: மக்களவை தேர்தலை கூட்டணியோடு சந்திக்கும் வகையில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வருகிறது, இதுவரை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், என்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக அறிவித்து வருகிறது, பாஜகவுக்கு 7 தொகுதிகள், பாமகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகத்துக்கு 1 தொகுதி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கூட்டணி கட்சிகளுக்கு போக தற்போது மீதம் 26 தொகுதிகள் அவர்கள் வசம் உள்ளன.

நிர்பந்திக்கும் தேமுதிக

அதிமுக கூட்டணியில் நிச்சயம் தேமுதிக இணையும் என பாஜக, அதிமுக கட்சி பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக சார்பாக துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர், இருப்பினும் தேமுதிக கூட்டணி உடன்பாடு எட்டப்பட வில்லை. இதற்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருவதே காரணம் என கூறப்படுகிறது. பாமகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாக தகவல்.

சமரசம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக

தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவும் பாஜவும் ஒருமித்த குரலை வெளிபடுத்துகிறது, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதே ஒரே வழி, தற்போது அதிமுக வசம் 26 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுகிறது அதிமுக, ஒரு வேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் சொந்த கட்சி தொண்டர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளதாகவும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதே அதிமுகவின் கருத்து.

6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு?

நிறைவாக தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மோடி தலைமையில் மாபெரும் மாநாடு!

வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறுகிறது, அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார், மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தேமுதிக இணைந்துவிட்டால் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த கூட்டணிக்கு மக்கள் எத்தணை தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்.

விஜயகாந்த்-ஓபிஸ் சந்திப்பு

OPS-Vijayakanth: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வந்தன, ஆனால் தேமுதிக-அதிமுக கூட்டணி சேருவதில் தொடர் இழுபறி நீடிக்கிறது, இந்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க துணை முதலமைச்சர் ஓபிஸ் தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து பேசினார், இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமாரும் உடனிருந்தார். பின்னர் பேசிய ஓபிஸ், கூட்டணி குறித்து இன்றோ நாளையோ நல்ல செய்தி வரும் என்றார்.

திமுகவின் தோழமைக் கட்சிகளும் எங்களோடு பேசுகிறார்கள் ஜெயக்குமார் தகவல்

Elections 2019: மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேரவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாகவும் குறிப்பாக திமுக தலைமையில் இருக்கும் சில கட்சிகளே எங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே அமைச்சர் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்தார்.

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை ஜெயக்குமார் பேச்சு

Elections 2019: மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக மாபெரும் கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே பாஜகவும் பாமகவும் இணைந்துள்ளனர்.அதிமுக கட்சி சார்பாக தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வரவில்லை என்றால் கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயகுமார்

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தினகரன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டியே தவிர யாரும் எங்களுக்கு போட்டியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவரும் வருக கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு

பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது. இந்த தருணத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வகிக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக அமமுகவை தவிர எந்த கட்சியாக இருந்தாலும் எங்களோடு கூட்டணி சேரலாம் என அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகான அழைப்பு விடுப்பதாக இன்றைய செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.