Premalatha Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார். இவர்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து இருப்பார்கள் என கருதப்படுகிறது.

நான்கு தொகுதிக்கு 400 பேரிடம் நேர்காணல் நடத்தியது தேமுதிக

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் 400 பேர் பங்கு கொண்டனர் அதிலிருந்து அக்கட்சி நான்கு பேரை தேர்வு செய்ய உள்ளது. விஜயகாந்த் நிலை கண்டு அக்கட்சியினர் வேதனை அடைந்தனர். விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

திமுக அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை, ஸ்டாலின் உறுதி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எங்கள் அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும் திமுக 20 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டதால் மீண்டும் அதிமுகவோடு தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து

வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயார் சரத்குமார் பேச்சு

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்கத் தயாராக உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக அதிமுகவுடனும், திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சரத்குமார் இந்தமுடிவை எடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனைகளில் இரு கட்சியினரும் ஈடுபடுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக தயார்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. அந்த 4 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பதே இழுபறிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தரவும் அதிமுக தயாராக உள்ளதாக தகவல்.

இன்று அறிவிக்கப்படுகிறது தேமுதிக அதிமுக கூட்டணி

DMDK: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிச்சயம் இணையும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்றது அதில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இன்று நிச்சயம் அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. தேமுதிகவிற்கு ஐந்து முதல் ஆறு தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி பங்கீட்டில் திணறுகிறதா அதிமுக?

AIADMK-DMDK: மக்களவை தேர்தலை கூட்டணியோடு சந்திக்கும் வகையில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வருகிறது, இதுவரை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், என்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக அறிவித்து வருகிறது, பாஜகவுக்கு 7 தொகுதிகள், பாமகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகத்துக்கு 1 தொகுதி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கூட்டணி கட்சிகளுக்கு போக தற்போது மீதம் 26 தொகுதிகள் அவர்கள் வசம் உள்ளன.

நிர்பந்திக்கும் தேமுதிக

அதிமுக கூட்டணியில் நிச்சயம் தேமுதிக இணையும் என பாஜக, அதிமுக கட்சி பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக சார்பாக துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர், இருப்பினும் தேமுதிக கூட்டணி உடன்பாடு எட்டப்பட வில்லை. இதற்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருவதே காரணம் என கூறப்படுகிறது. பாமகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாக தகவல்.

சமரசம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக

தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவும் பாஜவும் ஒருமித்த குரலை வெளிபடுத்துகிறது, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதே ஒரே வழி, தற்போது அதிமுக வசம் 26 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுகிறது அதிமுக, ஒரு வேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் சொந்த கட்சி தொண்டர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளதாகவும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதே அதிமுகவின் கருத்து.

6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு?

நிறைவாக தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மோடி தலைமையில் மாபெரும் மாநாடு!

வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறுகிறது, அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார், மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தேமுதிக இணைந்துவிட்டால் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த கூட்டணிக்கு மக்கள் எத்தணை தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்.

விஜயகாந்த்-ஓபிஸ் சந்திப்பு

OPS-Vijayakanth: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வந்தன, ஆனால் தேமுதிக-அதிமுக கூட்டணி சேருவதில் தொடர் இழுபறி நீடிக்கிறது, இந்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க துணை முதலமைச்சர் ஓபிஸ் தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து பேசினார், இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமாரும் உடனிருந்தார். பின்னர் பேசிய ஓபிஸ், கூட்டணி குறித்து இன்றோ நாளையோ நல்ல செய்தி வரும் என்றார்.

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ராமதாஸ் கணிப்பு

Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இடம்பெற்றுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் எங்கள் கூட்டணிக்கு இணைவார்கள் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வேளையில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் அவசர ஆலோசனை

Vijayakanth DMDK: மக்களவைத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு செல்லும் என அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வேளையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் எந்த கூட்டணிக்கு செல்லப்போகிறார் என்பதை தீர்மானிக்க தான் இந்த ஆலோசனை எனக் கூறப்படுகிறது.

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை ஜெயக்குமார் பேச்சு

Elections 2019: மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக மாபெரும் கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே பாஜகவும் பாமகவும் இணைந்துள்ளனர்.அதிமுக கட்சி சார்பாக தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வரவில்லை என்றால் கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் விஜய்காந்திடம் அரசியல் பேசினார் பிரேமலதா தகவல்

Lok Sabha Elections 2019: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் அண்மையில் சென்னை திரும்பினார். அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடிகர் ரஜினிகாந்த், திருநாவுகரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் அரசியல் குறித்தோ கூட்டணி குறித்தோ ஏதுவும் பேசவில்லை என கூறினார் ஸ்டாலின். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேமலதா இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது நிச்சாயம் அரசியல் பேசுவார்கள் அது இயல்பு என்றார். அதே போல் தான் ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பும் இருந்தது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

DMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

பா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை அடுத்து நாளை மறுநாள் காலை 8.30 மணி அளவில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னைக்கு வந்த பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.