Lok Sabha constituency

20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ!

20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ!

வேட்பாளர்கள் தொகுதி மற்றும் பெயர்

  1. வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
  2. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
  3. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  5. காஞ்சிபுரம் (SC)– ஜி.செல்வம்
  6. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
  7. வேலூர் – கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
  8. தருமபுரி – டாக்டர் செந்தில் குமார்
  9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
  10. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
  11. நீலகிரி- ஆ.ராசா
  12. பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
  13. திண்டுக்கல் – வேலுச்சாமி
  14. கடலூர் – டி.ஆர்.வி. ரமேஷ்
  15. மயிலாடுதுறை – ராமலிங்கம்
  16. தஞ்சாவூர் – பழனிமாணிக்கம்
  17. சேலம் – எஸ்.ஆர். பார்த்திபன்
  18. தூத்துக்குடி – கனிமொழி
  19. தென்காசி (SC) – தனுஷ்குமார்
  20. திருநெல்வேலி – ஞான திரவியம்

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

  1. சேலம்
  2. நாமக்கல்
  3. கிருஷ்ணகிரி
  4. ஈரோடு
  5. கரூர்
  6. திருப்பூர்
  7. பொள்ளாச்சி
  8. ஆரணி
  9. திருவண்ணாமலை
  10. சிதம்பரம் (தனி)
  11. பெரம்பலூர்
  12. தேனி
  13. மதுரை
  14. நீலகிரி (தனி)
  15. திருநெல்வேலி
  16. நாகப்பட்டனம் (தனி)
  17. மயிலாடுதுரை
  18. திருவள்ளூர் (தனி)
  19. காஞ்சிபுரம் (தனி)
  20. தென் சென்னை

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

பாஜக

  1. கன்னியாகுமரி
  2. சிவகங்கை
  3. கோவை
  4. ராமநாதபுரம்
  5. தூத்துக்குடி

பாமக

  1. தருமபுரி
  2. விழுப்புரம்
  3. அரக்கோணம்
  4. கடலூர்
  5. மத்திய சென்னை
  6. திண்டுக்கல்
  7. ஸ்ரீபெரும்புதூர்

தேமுதிக

  1. கள்ளக்குறிச்சி
  2. திருச்சி
  3. சென்னை வடக்கு
  4. விருதுநகர்
  5. தமிழ் மாநில காங்கிரஸ்

    1. தஞ்சாவூர்
    2. புதிய தமிழகம்

      1. தென்காசி
      2. புதிய நீதி கட்சி

        1. வேலூர்
        2. என்.ஆர்.காங்கிரஸ்

          1. புதுவை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்

  1. குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
  2. ஆம்பூர் – பாலசுப்பிரமணி
  3. அரூர் – முருகன்
  4. மானாமதுரை – மாரியப்பன் கென்னடி
  5. சாத்தூர் – சுப்பிரமணியன்
  6. பரமக்குடி – முத்தையா
  7. பூவிருந்தவல்லி – ஏழுமலை
  8. பெரம்பூர் – வெற்றிவேல்
  9. திருப்போரூர் – கோதண்டபாணி போட்டி

மக்களவை வேட்பாளர் பட்டியல்

  1. கரூர் – தங்கவேல்
  2. பெரம்பலூர் – ராஜசேகரன்
  3. சிதம்பரம் – இளவரசன்
  4. மயிலாடுதுறை – செந்தமிழன்
  5. நாகை – செங்கொடி
  6. தஞ்சை – முருகேசன்
  7. சிவகங்கை – பாண்டி
  8. காஞ்சிபுரம் – முனுசாமி
  9. விழுப்புரம் – கணபதி
  10. சேலம் – செல்வம்
  11. நாமக்கல் – சாமிநாதன்
  12. ஈரோடு-செந்தில்குமார்
  13. திருப்பூர்-செல்வம்
  14. நீலகிரி – ராமசாமி
  15. கோவை – அப்பாதுரை
  16. பொள்ளாச்சி – முத்துக்குமார்
  17. திருவள்ளூர்-பொன். ராஜா,தென்
  18. சென்னை-இசக்கி சுப்பையா
  19. ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நாராயணன்
  20. மதுரை – டேவிட் அண்ணாதுரை
  21. ராமநாதபுரம் – ஆனந்த்
  22. தென்காசி – பொன்னுத்தாய்
  23. திருநெல்வேலி – ஞான அருள்மணி
  24. திருச்சி – சாருபாலா தொண்டைமான்
  25. தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மீதம் உள்ளவர்களின் பட்டியல் இனிமேல்தான் வெளியிடப்படும்.

தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது, மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய 2 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதியில் பி.ஆர் நடராஜனும் மதுரையில் சு.வெங்கடேசனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் பி.ஆர் நடராஜன் முன்னாள் கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் என்பது கூறிப்பிடதக்கது. இரு வேட்பாளர்களும் திமுக ஆதரவோடு போட்டியிடுவதால் அவர்கள் வெற்றி பெருவார்கள் என அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது திமுக

வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து பட்டியலை நேற்று வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியை எங்களுக்கே தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார், விசிகவின் கோரிக்கை ஏற்று தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்ட தொகுதியையே கொடுத்துள்ளதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை தொகுதிகளை தன்வசம் வைத்துகொண்ட திமுக!

மக்களவை தேர்தல் நெருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அப்போது வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னை ஓட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆகிய தொகுதிகளிலும் திமுக தான் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து தொகுதிகளில் திமுக தன்வசம் வைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் திமுக சார்பில் சமூகத்தில் பிரபலமானவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கன்னியாகுமாரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி இருக்கிறது அதன் படி

திமுக

  1. சென்னை வடக்கு
  2. சென்னை தெற்கு
  3. மத்திய சென்னை
  4. ஸ்ரீபெரும்புதூர்
  5. காஞ்சிபுரம் (தனி)
  6. அரக்கோணம்
  7. வேலூர்
  8. தர்மபுரி
  9. திருவண்ணாமலை
  10. கள்ளக்குறிச்சி
  11. சேலம்
  12. நீலகிரி (தனி)
  13. பொள்ளாச்சி
  14. திண்டுக்கல்
  15. கடலூர்
  16. மயிலாடுதுறை
  17. தஞ்சாவூர்
  18. தூத்துக்குடி
  19. தென்காசி (தனி)
  20. திருநெல்வேலி

காங்கிரஸ்

  1. புதுச்சேரி
  2. சிவகங்கை
  3. கன்னியாகுமாரி
  4. விருதுநகர்
  5. தேனி
  6. திருச்சிராப்பள்ளி
  7. கரூர்
  8. கிருஷ்ணகிரி
  9. ஆரணி
  10. திருவள்ளூர் (தனி)

விடுதலை சிறுத்தைகள் கட்சி

  1. விழுப்புரம் (தனி)
  2. சிதம்பரம் (தனி)

மதிமுக

  1. ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

  1. மதுரை
  2. கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

  1. திருப்பூர்
  2. நாகை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

  1. ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

  1. நாமக்கல்

ஐஜேகே

  1. பெரம்பலூர்

மேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் தொடர் விடுமுறையால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்பு

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் வருகின்ற சமயத்தில் தொடர்ந்து 5 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் வாக்கு பதிவு குறைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் கட்சிகள் சார்பில் கூறப்படுகிறது. ஐந்து நாள் விடுமுறை வருவதால் அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன்

மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் வருகின்ற 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து தான் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அமமுக மூத்த நிர்வாகிகளும் டிடிவி தினகரன் அவர்களும் ஆலோசித்து வருகின்றார்கள். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவின் கருத்துக்களை கேட்டறிய பெங்களூரு அக்ரஹார சிறையில் அவரை சென்று சந்தித்தனர். பின்பு செய்தியாளர் சந்தித்த டிடிவி தினகரன் மிக விரைவில் வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும், என்றார்.

”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணி ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது கட்சிகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது, தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் தொகுதி பங்கீடு, யாருக்கு எந்த தொகுதிகள் என்பது போன்ற அலோசனைகளையெல்லாம் நிறைவு செய்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சார பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 9 கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பிரதமரை கடுமையாக சாடிய ராகுல்

பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மாநில கட்சிகளை மத்திய பாஜக அரசு அடக்குமுறை செய்ய முயற்ச்சிப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தை டெல்லியில் இருந்து பாஜக ஆண்டுவருவதாகவம் கூறினார். மேலும் 2014 நாட்டு மக்களிடம் மோடி என்ன வாக்குறுதிகளை தந்தாரோ எதையுமே அவர் நிறைவேற்றவில்லை.

15 லட்சம் ஏங்கே?

2014 மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய மோடி அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துகிறேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்து 5 வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றார் ராகுல்.

மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எச்.ஏ.எல் என்ற நிறுவனத்தின் மூலமாக 526 கோடி ரூபாய்க்கு போர் விமானம் வாங்க அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய மோடி அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தற்போது ஒரு போர் விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் மூலம் ஊழல் செய்த மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது என்றார்.
45 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம்

மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கான அரசு. தற்போதைய ஆட்சியில் ஏழைமக்களும், இளைஞர்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றார். மேலும் கடந்த 45 வருடகாலம் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு செய்து தரப்படும் எனக் கூறினாரே தவிர அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பது தான் உண்மை.
போட்டி போட்டு புகழ்ந்த ராகுல் மற்றும் ஸ்டாலின்

பிரச்சார பொதுகூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நமது நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் அவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பதவியேற்று கொள்வார் என கூறினார். பின்னர் தனது உரையை துவங்கிய ராகுல் காந்தி தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இரு தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இது எந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் அளிக்கும் என்பதை மக்கள் விரைவில் தெரியப்படுத்துவார்கள்.

மோடியா ? ராகுலா ?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தான் ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.

மே23 வரை காத்திருப்போம்….

ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார். இவர்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து இருப்பார்கள் என கருதப்படுகிறது.

பொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு

மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி மக்களுக்கு கொடுத்திருந்தார். மோடி அவர்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 இலட்சம் தருவதாகச் சொன்னார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும் தெரிவித்தார். அவர் கூறிய எதையுமே செயல் படுத்தவில்லை என ராகுல் குற்றம் சாட்டினார்.

ராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பற்றி கருத்து தெரிவித்த ஜி.கே வாசன் ராகுலை விட மோடி தான் சூப்பர் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் மதசார்பற்ற கூட்டணி எனவும் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது தான் அதற்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம் என்றார்.

நான்கு தொகுதிக்கு 400 பேரிடம் நேர்காணல் நடத்தியது தேமுதிக

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் 400 பேர் பங்கு கொண்டனர் அதிலிருந்து அக்கட்சி நான்கு பேரை தேர்வு செய்ய உள்ளது. விஜயகாந்த் நிலை கண்டு அக்கட்சியினர் வேதனை அடைந்தனர். விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உட்பட சில கட்சிகள் இருக்கின்றன. யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

மோடியை கட்டித் தழுவியது ஏன்? ராகுல் விளக்கம்

சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ வெறுப்போ கிடையாது எனவும் எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு அழகான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவே நாடாளுமன்றத்தில் அவரைக் கட்டியணைத்தேன் என ராகுல் விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை

கன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.

மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் 24ஆம் தேதி அறிமுகம்

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா கோயம்புத்தூரில் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடுகிறது. வருகிற 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் நிகழ்ச்சியில் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்?

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொருத்தவரை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இம்முறை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் கட்சி சார்பாக களமிறங்குவார்கள் எனவும் தெரிகிறது.

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னம் முடக்கம்

நாம் தமிழர் கட்சி இதுவரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது ஆனால் போதிய வாக்கு சதவீதம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், உட்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உடன்பாடு எட்டப் படலாம் எனவும் தெரிகிறது.

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் நாளை விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர், மேலும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேர்காணல் நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றவுடன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி வேல்முருகன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என நிறுவன தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் அந்த முடிவினை இரு கைவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.

சிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளது. அதே சமயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேரடியாக களம் காணும் என தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இயல்பாகவே வார்த்தைப் போர் நடைபெறும் சூழலில் தற்போது நேரடியாக களம் காணுவதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி

அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிமுக குறைந்தது பத்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

மதிமுவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்க வாய்ப்பு

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதியம் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து மு க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த ஒரு தொகுதியிலும் வைகோ போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகிறது, மாறாக ராஜ்யசபா சீட்டிற்கு வைகோ முயற்சிப்பார் என தெரிகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் புதுவை முதல்வர் கருத்து

மக்களவைத் தேர்தல் நடைபெறும் அன்றே பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இந்த 18 தொகுதிகளுக்கான தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி 10 தொகுதிகளுக்கு மேல் வென்றால் அது பெரிய விஷயம் எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடங்கியதா? ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்-நாகை எல்லை காணூரில் நிரந்தர செக்ஸ்போஸ்ட்டில் நேற்று காலை போலீசார் வாகனங்களில் தீவிர சோதனையிட்டனர். அப்போது கார் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல்லை – தென்காசி சாலை அத்தியூத்தில் நடந்த சோதனையில் நெல்லையில் இருந்து வந்த காரில் ரூ.20 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாமக-விற்கு எந்தெந்த தொகுதிகள்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிதம்பரம், தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ஆரணி தொகுதியை பொறுத்தவரை சௌமியா அன்புமணி அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை

கடந்த தேர்தலில் போதிய வாக்கு சதவீதத்தை பெறாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி இழந்துள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின் படி குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்தால் மட்டுமே தங்கள் சின்னத்தை தக்கவைத்து கொள்ள முடியும், அதே நேரம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சிக்கு சின்னம் தேர்ந்தேடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி தமிழ்நாடு இளைஞர் கட்சி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் அந்த கட்சியின் கோரிக்கையை ஏற்று மோதிரம் சின்னத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னதில் போட்டியிடும் என பேசப்பட்டு வந்த நிலையில் அவர்களது மோதிரம் சின்னமும் முடக்கப்பட்டதால் நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிறது.

ரஜினி ஆதரவளிப்பார் என நம்புகிறேன், கமல் பேச்சு

வருகின்ற மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலிலும் நான் போட்டியிடபோவதில்லை என அண்மையில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எனவும் கூறினார். இந்த வேளையில் ரஜினி எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக்கு நம்பிக்கையுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போகிறேன், எந்த தொகுதி என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

திருச்சி தொகுதியை பெற திருநாவுக்கரசர் முயற்சி

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி போன்ற தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் திருச்சி தொகுதியையும் எங்களுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கையும் திமுகவிடம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அதில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதே தொகுதியை மதிமுகவும் கேட்டு வருவதால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது, மிக விரைவில் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு யாருக்கு எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் விசிகே போட்டியா?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சின்னம் இருப்பதால் மற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் “கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்” என்றார்.

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் “இணைந்த கைகள்” சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிறகு வேறு எந்த கட்சிக்கும் உடலுறுப்புகளை சின்னமாக வழங்குவதில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் அதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. மேலும் அதைத் தொடர்ந்து விசில், பேனா, டார்ச் லைட் ஆகியவற்றில் ஒரு சின்னம் ஒதுக்கும்படி மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு வாய்ப்பு அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாகவும், இருப்பினும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதால் பாஜக மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்பதால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்று பட்டியல் வெளியாகலாம் என தகவல் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் வரிசையில் தேமுதிகவும் இணையும் என்ற தகவல் கடந்த மூன்று வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடுகளில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. மேலும் அவர்கள் கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, போன்ற தொகுதிகளை கோரியுள்ளதாகவும் தெரிகிறது.

சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியில்லை, ரஜினிகாந்த் அறிவிப்பு

தமிழகத்தில் நடக்கவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை எனவும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என 2017 ஆம் ஆண்டே ரஜினிகாந்த தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல்

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு தேர்தல் நடைபெறாது எனவும் தகவல்.

மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் இருக்காது கமல் திட்டவட்டம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது என் காலத்திற்கு பிறகு என் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ, மகளோ என் மைத்துனரோ கட்சியை எடுத்து நடத்த மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மக்கள் அறவே நிறுத்திவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 5000 , 10000 வாங்குவது நீங்கள் நிறுத்திவிட்டு நல்லவர்களுக்கு வாக்களித்தால் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் வரை நீங்கள் சம்பாதிப்பதற்கான வழிகள் வகுக்கப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியாக இருக்கலாம் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் பாஜகவு தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “தூத்துக்குடி தொகுதியை எங்களுக்குத் தர வேண்டும் என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், கட்சி மேலிடம் சம்மதித்தால் நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன் என தமிழிசை கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் விரைவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை பங்கிட்டுக் கொடுத்துள்ளது. பாமகவுக்கு ஏழு தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் இன்னும் சில கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கியுள்ளது. தற்போது அதிமுக கைவசம் 25 தொகுதிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதால் அவர்களுக்கும் தொகுதிகளை பங்கிட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. இந்நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது குறித்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்ததொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பித்தார் பொன்னையன்

மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது இதனை கருத்தில் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார். தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி

மக்களவைத் தேர்தலில் இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என வைகோ கணித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் நானும் என் கழகத் தோழர்களும் பிரச்சாரம் செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம், என்ன பேசினார் மோடி?

இந்திய நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உட்பட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தமிழகத்தில் திமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது எனவும் கூறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூறித்தும் பேசினார்.

பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள்

  • தமிழகம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.
  • மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்தார்.
  • இலங்கை கடற்படையிடம் சிக்கி கொண்ட 1900 மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொடுத்துள்ளதையும் கூறிப்பிட்டார்.
  • இது போன்ற விஷயங்களை குறிப்பிட்ட பிரதமர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது தனது வெறுப்புகளை வெளிப்படுத்த மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கை எடுத்துவருகிறது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். எதிர்கட்சிகளின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் என்னை சோர்வடைய செய்யாது என்றார். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். நிறைவாக பேசிய பிரதமர் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வாசகத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

    மீண்டும் வருவாரா மோடி ?

    பிரதமர் மோடி பாஜக பொதுகூட்டங்களில் கலந்து கொள்ள மீண்டும் தமிழகம் வருவார் என்று பாஜக பிரதிநிதிகள் தகவல் சொல்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கான துள்ளியமான பதிலை மக்கள் மிக விரைவில் தெரிவிப்பார்கள்.

    மீண்டும் வருமா பாஜக அல்லது மீண்டு வருமா காங்கிரஸ், மக்களவை தேர்தலில் மக்களின் பதிலுக்காக காத்திருப்போம்.

    திமுக அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை, ஸ்டாலின் உறுதி

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எங்கள் அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும் திமுக 20 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டதால் மீண்டும் அதிமுகவோடு தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

    துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து

    வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.

    எப்போது தேர்தல் நடைபெறும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

    நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது இந்தியாவை பொறுத்தவரை பல கட்டமாக தேர்தல் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு என்று தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளதால் மாநில தேர்தல் அதிகாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் சரத்குமார் தகவல்

    மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என அண்மையில் தனது முடிவை அறிவித்திருந்தார் சரத்குமார். மேலும் நேற்று அவர் பேசுகையில் தேமுதிகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர் பேசிய சரத்குமார் நாங்கள் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். தனித்துப் போட்டியிடுவதற்கான காரணம் எங்களது கட்சியின் வாக்கு வங்கியை நாங்கள் தெரிந்து கொள்வதற்காக தனித்து போட்டியிடுகிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

    கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் மாநாடு

    மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் வருகின்ற மார்ச் 13ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நிகழ்விற்கு தலைமை ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

    தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயார் சரத்குமார் பேச்சு

    வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்கத் தயாராக உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக அதிமுகவுடனும், திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சரத்குமார் இந்தமுடிவை எடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனைகளில் இரு கட்சியினரும் ஈடுபடுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? ஓபிஸ் கேள்வி

    அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஸ், எதிர்கட்சியினரை பார்த்து “உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என உங்களால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கூட்டணி விஷயத்தில் அவர் என்ன செய்திருப்பாரோ, அவரது தீவிர விஸ்வாசியாகிய நாங்களும் அதனையே செய்துள்ளோம் என்றார்.

    சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் – மோடி அறிவிப்பு

    அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உட்பட பல கட்சித் தலைவர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மேலும் பேசிய பிரதமர் தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தகவல்கள் தமிழில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார், இறுதியில் “நாற்பதும் நமதே நாடும் நமதே” என கூறி உரையை நிறைவு செய்தார்.

    தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்

    Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

    தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக தயார்

    Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. அந்த 4 தொகுதிகளை தேமுதிக ஏற்க மறுப்பதே இழுபறிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தரவும் அதிமுக தயாராக உள்ளதாக தகவல்.

    பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ்க்கு அழைப்பு

    அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இன்று கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்வு சென்னை வண்டலூர் அருகே நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அழைக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வரவேற்றனர். ஆகையால் இன்றைய நிகழ்வில் ராமதாஸ் அவர்கள் நிச்சயம் பங்கேற்ப்பார் என தகவல் வெளியாகியுள்ளன.

    சிதம்பரம் தொகுதியை கேட்கும் காங்கிரஸ்

    DMK-Congress Alliances: திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சார்பில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தருணத்தில் யாருக்கு எந்த தொகுதி என்ற ஆலோசனையும் துவங்கியுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியை பல மாதங்களுக்கு முன்னதாகவே திருமாவளவன் கேட்டு வருகிறார். மேலும் 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களிலும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. திமுக தலைமை யாருக்கு அந்த தொகுதியை ஒதுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இன்று அறிவிக்கப்படுகிறது தேமுதிக அதிமுக கூட்டணி

    DMDK: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிச்சயம் இணையும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்றது அதில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இன்று நிச்சயம் அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. தேமுதிகவிற்கு ஐந்து முதல் ஆறு தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்தபோவதில்லை, வைகோ தகவல்

    Vaiko black flag protest: நரேந்திர மோடி மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க நாளை சென்னை வருகிறார், அதில் அதிமுக, பாமக போன்ற கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். நாளை மோடியை எதிர்த்து கருப்பு கொடி காட்ட மாட்டோம் என வைகோ அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் அரசு விழாவில் பங்கேற்க்க மோடி வந்ததால் தான் மதிமுக கருப்பு கொடி காட்டியதாகவும் நாளை அவர் பிரச்சாரம் செய்யதான் வருகிறார் என்பதால் நாங்கள் கருப்பு கொடி காட்ட போவதில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

    அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்

    DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.

    திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி

    DMK-MDMK Alliances: திமுக கூட்டணியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். மறுமலர்ச்சி திராவிட கழகம் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    20 இடங்களில் போட்டியிடும் திமுக

    Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி வருகிறது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு போக தனக்கென திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை விட்டுகொடுக்கும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கபட்டன. ஆனால் 8 இல் மட்டுமே காங்கிரஸ் வேற்றி பெற்றது. இதே நிலைமை தற்போதும் நடந்துவிடுமோ என சிலர் அஞ்சுகின்றனர்.

    நாளை சென்னை வருகிறார் மோடி

    Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

    அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதி

    Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி -ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் வருகின்ற 21வது சட்டமன்ற தேர்தலிலும் புதிய நீதி கட்சி அதிமுக ஆதரவு நிலைபாடு எடுக்கும் என தெரிகிறது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் அக்கட்சியின் தலைவர் சண்முகம் போட்டியிடுவார் என தெரிகிறது.

    புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி

    Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்துள்ளார். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியே போட்டியிடுவார் என தெரிகிறது. இதுவரை 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுத்துள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா போட்டி?

    Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும் 2009 மக்களவைத் தேர்தலிலும் ஆ ராசா நீலகிரியில் தான் போட்டியிட்டார். 2009இல் மகத்தான வெற்றியை பதிவு செய்திருந்தார். அதேபோல் 2014லிலும் நீலகிரி தொகுதியில் தான் போட்டியிட்டடார். ஆனால் அப்போது வெற்றி கிட்டவில்லை. இம்முறையும் ஆ ராசா நீலகிரி தொகுதியில் தான் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    பாமகவால் அதிமுகவுக்கு பலவீனம் ஏற்படும் திருமாவளவன் கருத்து

    Elections 2019 Tamil Nadu: அதிமுகவும் பாஜவும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என அனைவருமே கூறிவந்தனர், ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைந்தது சில பாமக நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியாய் அமைந்தது, அதனால் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர் தனது பதவியை ராஜினாமா செய்தனர். பாமக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளதை குறித்து கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன் “ பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பலவீனம் ஏற்படும்” என்று பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்துள்ளார்.

    தொகுதி பங்கீட்டில் திணறுகிறதா அதிமுக?

    AIADMK-DMDK: மக்களவை தேர்தலை கூட்டணியோடு சந்திக்கும் வகையில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வருகிறது, இதுவரை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், என்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அதிமுக அறிவித்து வருகிறது, பாஜகவுக்கு 7 தொகுதிகள், பாமகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகத்துக்கு 1 தொகுதி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கூட்டணி கட்சிகளுக்கு போக தற்போது மீதம் 26 தொகுதிகள் அவர்கள் வசம் உள்ளன.

    நிர்பந்திக்கும் தேமுதிக

    அதிமுக கூட்டணியில் நிச்சயம் தேமுதிக இணையும் என பாஜக, அதிமுக கட்சி பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதிமுக சார்பாக துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர், இருப்பினும் தேமுதிக கூட்டணி உடன்பாடு எட்டப்பட வில்லை. இதற்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருவதே காரணம் என கூறப்படுகிறது. பாமகவுக்கு நிகரான தொகுதிகள் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாக தகவல்.

    சமரசம் செய்ய வேண்டிய நிலையில் அதிமுக

    தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என அதிமுகவும் பாஜவும் ஒருமித்த குரலை வெளிபடுத்துகிறது, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதே ஒரே வழி, தற்போது அதிமுக வசம் 26 தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுகிறது அதிமுக, ஒரு வேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் சொந்த கட்சி தொண்டர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளதாகவும் அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதே அதிமுகவின் கருத்து.

    6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு?

    நிறைவாக தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    மோடி தலைமையில் மாபெரும் மாநாடு!

    வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறுகிறது, அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார், மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தேமுதிக இணைந்துவிட்டால் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

    இந்த கூட்டணிக்கு மக்கள் எத்தணை தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்.

    விஜயகாந்த்-ஓபிஸ் சந்திப்பு

    OPS-Vijayakanth: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வந்தன, ஆனால் தேமுதிக-அதிமுக கூட்டணி சேருவதில் தொடர் இழுபறி நீடிக்கிறது, இந்நிலையில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க துணை முதலமைச்சர் ஓபிஸ் தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து பேசினார், இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமாரும் உடனிருந்தார். பின்னர் பேசிய ஓபிஸ், கூட்டணி குறித்து இன்றோ நாளையோ நல்ல செய்தி வரும் என்றார்.

    தொகுதிகளை வாரிவழங்கும் திமுக…

    Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்த வரை ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது, அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன, அதோடு சில அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அள்ளி கொடுத்த திமுக

    திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கியதுவம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது காங்கிரஸ் கட்சிதான், இது தேசிய கட்சி, மத்தியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி, இம்முறை அவர்கள் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்தே தொடர்கிறது, மேலும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    விசிகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், எனவும் எங்கள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கபட வேண்டும், அதிலும் நானே போட்டியிடுவேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், இந்த கோரிக்கையை திமுக ஏற்கும் என எதிர்பார்த்த நிலையில், அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதியையும் திமுக வழங்கியுள்ளது, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை விசிக கேட்கும் என தெரிகிறது, விசிக தொண்டர்கள் நம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிக்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பது தொண்டர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

    திமுகவின் தோழமை கட்சிகளாக விளங்கிய மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை தர முன்வந்துள்ளது, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

    திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?

    கூட்டணி அமைத்தால் தேர்தலை சந்திப்பதை விட தொகுதி பங்கீடுவது தான் சவாலாக இருக்கும், அதே நிலைதான் தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது, மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், போன்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகளையும், மேலும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும், அந்த வகையில் ஏற்கனவே 19 தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது திமுக, மேலும் ஐஜேகே போன்ற கட்சிகளும் உள்ளனர், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தால் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

    கருணாநிதி அவர்கள் இருந்த போதே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டு 16 தொகுதிகளில் மட்டுமெ திமுக நின்றது, இருப்பினும் தற்போதைய சூழலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சரியாக கையாண்டுள்ளாரா என்பதே மீதமுள்ள கதை.

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டி

    Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவை தொகுதியில் திமுக மகளிரணி செயலரும், ராஜ்ய சபா எம்,பியுமான கனிமொழி நிச்சயம் போட்டியிடுவார் என்ற தகவல் சமீப காலங்களில் பேசப்பட்டு வந்தது, அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக பிரதிநிதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை கட்சி தலைமைக்கு கனிமொழி அளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர், அதன் மூலம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    மதிமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு

    DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு திமுக வழங்கி வருகிறது, அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மதிமுகவிற்கும் இரண்டு தொகுதிகள் தான் வழங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. திமுகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மறுமலர்ச்சி திராவிட கழக பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

    DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது, மக்களவை தேர்தலில் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதியில் என்பது குறித்த அலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் சிபிஐ கட்சியின் மாநில பொருப்பாளர் திரு. முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டது, சிபிஐ கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    எந்த தொகுதியிலும் போட்டியிட தயார், தமிழிசை பேச்சு

    Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது. பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை “எந்த தொகுதியாக இருந்தாலும் நான் போட்டியிட தயார்”, அது எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

    Lok Sabha Elections 2019 Tamil Nadu: திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது. சிதம்பரம் தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பெயர்கள் இப்போது வெளியிடப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ராமதாஸ் கணிப்பு

    Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இடம்பெற்றுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் எங்கள் கூட்டணிக்கு இணைவார்கள் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வேளையில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வைகோ கருப்புக்கொடி போராட்டம்

    Vaiko black flag protest: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமாரி வருகிறார் அவர் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவில் பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் தமிழகத்தில் எந்த இடத்திற்கு பிரதமர் வந்தாலும் அவரை எதிர்த்து கருப்பு கொடி காட்டுவோம் என உறுதியாக கூறியுள்ளார் பிரதமர் வரும் போது யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என ஏற்கனவே பொன்ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் அவசர ஆலோசனை

    Vijayakanth DMDK: மக்களவைத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு செல்லும் என அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வேளையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் எந்த கூட்டணிக்கு செல்லப்போகிறார் என்பதை தீர்மானிக்க தான் இந்த ஆலோசனை எனக் கூறப்படுகிறது.

    பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் ஓபிஎஸ் அழைப்பு

    AIADMK: வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாளை 66வது பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார் மு க ஸ்டாலின்

    DMK President M.K Stalin: திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் நாளை 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் இன்று மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மார்ச் ஒன்றாம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அதோடு உங்களின் ஒருவனான என்னுடைய பிறந்த நாளும் அன்றுதான் உங்கள் பேரன்புமிக்க ஆதரவுடன் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது எனக் குறிப்பிட்டுள்ளார். வருகின்ற மக்களவைத் தொகுதிகளில் வெற்றிக் கனிகளை பறித்து தாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ ஆவேசம்

    Vaiko black flag protest: தேர்தல் வருவதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் நாங்கள் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் என ஆவேசமாக பேசியுள்ளார். சமீபத்தில் பொன்ராதாகிருஷ்ணன் யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறாம் தேதி வண்டலூர் அருகே பாஜக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவார்கள் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

    PM Modi visit to Kanyakumari: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்குமுன் மதுரையிலும் திருப்பூரிலும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அதேபோல் மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆறாம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பார் எனவும் தெரிகிறது.

    எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு

    BJP AIADMK PMK alliance 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார். எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது எனவும் , 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாகவும் , அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

    வைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து

    MDMK தமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார். அண்மையில் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சென்ற அவர் வரும் மக்களவைத் தேர்தலில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை

    Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    மார்ச்சில் ஈரோடு வருகிறார் பிரதமர் மோடி

    Modi in Erode: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் மாபெரும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான அதிமுக பாமக போன்ற கட்சிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

    ரஜினி கமல் கூட்டணி வைக்க வேண்டும் விஷால் கருத்து

    தமிழக நலன் கருதி கமலும் ரஜினிகாந்த் அவர்களும் ஒன்று சேர்ந்து அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்தோடு கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு கமல் ஹாசன் “ரஜினி கட்சி ஆரம்பித்த பின்பு பார்ப்போம்” என கூறியுள்ளார்.

    பாமக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் வன்னியர் சங்க தலைவர் பேட்டி

    Elections 2019: அகில இந்திய வன்னியர் சங்கத்தலைவர் ஜெய ஹரி அன்புமணி ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.அதிமுக பாமக பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திப்பது நிச்சயம் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    அதிமுக சின்னத்தில் போட்டியிட தயார் பாரிவேந்தர் அறிவிப்பு

    Elections 2019: மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாரிவேந்தர் தற்போது பாஜக எங்களை அழைத்தால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டால் அதிமுகவின் சின்னத்திலும் நாங்கள் நிற்க தயார் என தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்தக் கூட்டணி சரிவராத பட்சத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

    திமுகவின் தோழமைக் கட்சிகளும் எங்களோடு பேசுகிறார்கள் ஜெயக்குமார் தகவல்

    Elections 2019: மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேரவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாகவும் குறிப்பாக திமுக தலைமையில் இருக்கும் சில கட்சிகளே எங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே அமைச்சர் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்தார்.

    அதிமுக ரயில் டெல்லி செல்கிறது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    AIADMK: அதிமுக என்னும் ரயில் டெல்லி செல்வதாகவும், விருப்பம் உள்ள கட்சிகள் எங்களோடு சேர்ந்து பயணிக்கலாம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எங்களோடு இணைந்தால் பத்திரமாக டெல்லி செங்கோட்டை செல்லலாம் எனவும் ஏராவிட்டால் இன்ஜின் இல்லாத ரயிலில் தான் ஏற வேண்டும் என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுவரை எந்த கட்சியுடன் கூட்டு சேரா கட்சிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்து உள்ளதாக தெரிகிறது.

    பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் விலகல்

    PMK: பாமகவின் மாநிலத் துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித் பதவி வகித்து வந்தார். ஆனால் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவோடு கூட்டணி வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஊழல் கட்சி என சொல்லிவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்து உள்ளது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

    புயல்வேக பிரச்சாரத்திற்கு வைகோ தயார் ஸ்டாலின் பேச்சு

    Lok Sabha Elections 2019: 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய புயல்வேக பயணத்திற்கு வைகோ தயாராகிவிட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கப்படும். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்” 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம் செய்வார்” என்றார்.

    கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி

    Elections 2019 சென்னையில் நடந்த புதிய தமிழகம் கட்சி பொதுகூட்டத்தில், பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை எந்த கட்சி ஏற்கிறதோ அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

    சின்ன பையனை வைத்து பேச வேண்டாம்- ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

    AIADMK: மக்களவை தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் இணையும் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. சில கட்சிகளை விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகர் கட்சி மேடைகளில் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜேந்திரபாலாஜி சின்ன பையனை வைத்து தேமுதிக பேசவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

    DMK Alliances: மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகுதியில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

    அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது ராஜேந்திரபாலாஜி

    AIADMK: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உரையாற்றினார். அப்போது அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது என தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கட்சியாக இருந்தாலும் பாஜக அதிமுகவை சார்ந்துதான் இருக்கிறது என்ற தொனியில் பேசி இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    நம்பிக்கை இழக்காதீர்கள்- அன்புமணி

    Lok Sabha Elections 2019: சென்னையில் இன்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கும் எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை விடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீட் மற்றும் மதுவிலக்கு வேண்டாம் என தொடர் அழுத்தம் கொடுப்போம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் அதற்காக அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையை பாராட்டினார்கள். ஆனால் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனியாக வரும் 15 ஆண்டுகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதனால் தான் வியூகத்தை மாற்றியுள்ளோம்” என கூறினார்.

    தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை ஜெயக்குமார் பேச்சு

    Elections 2019: மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக மாபெரும் கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே பாஜகவும் பாமகவும் இணைந்துள்ளனர்.அதிமுக கட்சி சார்பாக தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வரவில்லை என்றால் கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன், பாரிவேந்தர் கூட்டணி அமைக்க வாய்ப்பு

    Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஒருமித்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமையலாம் என தெரிவித்தார். இந்த நிலையில் எஸ் ஆர் எம் குழும நிறுவனத் தலைவரும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு பாரிவேந்தர் அவர்கள் கமல்ஹாசனோடு இணைந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    கமலை மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்

    முதல் முறையாக தேர்தலில் போட்டியிடப் போகும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரஜினிகாந்த் “கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யதின் தலைவர் என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.

    நாங்கள் தான் தமிழகத்தின் A டீம் – கமல்ஹாசன்

    Makkal Needhi Maiam: நெல்லை பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் என்னைப் பார்த்து பாஜகவின் B டீம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நாங்கள் தான் தமிழகத்தின் A டீம். இதில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியிட்ட கமல்ஹாசன் தனது கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு வெளியிட்டார். ஊழலை ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேட்பாளராக வரவேண்டும். நல்லவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் எங்கள் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.

    தமிழகத்தை ஆள்வது அல்ல முன்னேற்றுவது எங்கள் நோக்கம், அன்புமணி பேச்சு

    Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும், தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கே ஆதரவு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றமே எங்கள் நோக்கம் என்றார் அன்புமணி ராமதாஸ்

    ஸ்டாலின் விஜய்காந்திடம் அரசியல் பேசினார் பிரேமலதா தகவல்

    Lok Sabha Elections 2019: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் அண்மையில் சென்னை திரும்பினார். அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடிகர் ரஜினிகாந்த், திருநாவுகரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் அரசியல் குறித்தோ கூட்டணி குறித்தோ ஏதுவும் பேசவில்லை என கூறினார் ஸ்டாலின். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேமலதா இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது நிச்சாயம் அரசியல் பேசுவார்கள் அது இயல்பு என்றார். அதே போல் தான் ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பும் இருந்தது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

    இது மக்கள் விரோத கூட்டணி கே.எஸ். அழகிரி தாக்கு

    Lok Sabha Elections 2019: தற்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி விமர்சித்துள்ளார். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியே மக்கள் நலன் சார்ந்த கூட்டணி எனவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் மக்கள் நன்மையடைவார்கள் எனவும் கூறியுள்ளார்.

    தேமுதிகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை, ஓபிஸ் தகவல்

    Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையும் என தெரிகிறது. ஆனால் நீண்ட நாட்களாக இழுபறி நீடிக்கிறது. இதற்கு காரணம் பாமக வுக்கு வழங்கியுள்ளது போல் 7 தொகுதிகளுக்கு மேல் வழங்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓபிஸ் தகவல்.

    டிடிவி தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயகுமார்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தினகரன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டியே தவிர யாரும் எங்களுக்கு போட்டியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் உள்ள 66 கோடி பெண்கள் எங்கள் கட்சிக்கு பின்னணியில் உள்ளார்

    Lok Sabha 2019 பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 283 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என தேசிய பெண்கள் கட்சி தலைவர் ஸ்வேதா ஷெட்டி அறிவித்துள்ளார். நாட்டில் உள்ள 66 கோடி பெண்கள் எங்கள் கட்சிக்கு பின்னணியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    பாஜகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

    Lok Sabha Elections 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது என விமர்சித்தார். மேலும் தேர்தல் வரும் சமயத்தில் தான் பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதாக குற்றம்சாட்டினார்.

    காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் ?

    Lok Sabha Elections 2019 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார், அந்த வகையில் தமிழகம் வந்த அமித்ஷா, பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசினார், ”தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். பாஜக பொருத்தவரை பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டு பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள்”, அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.

    நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு

    Lok Sabha 2019 தொல் திருமாவளவன் தகவல் மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதர கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் ”நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.