சோஷியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Election Commission

சமூக ஊடகங்களில் மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என்பது போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இத்தகைய செய்திகளைப் பரப்பும் முகம் அறியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தவும், வதந்திகளைப் பரப்புவோரை தண்டிக்க சட்டங்களை பயன்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.