Chief Electoral Officer

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல்

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு தேர்தல் நடைபெறாது எனவும் தகவல்.

எப்போது தேர்தல் நடைபெறும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது இந்தியாவை பொறுத்தவரை பல கட்டமாக தேர்தல் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு என்று தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளதால் மாநில தேர்தல் அதிகாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

Lok Sabha Elections 2019: மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக , காங்கிரஸ் சிபிஎம்,சிபிஐ,பாஜக உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் அறிமுகமானது வாக்காளர் உதவி மைய இலவச உதவி எண் “1950”

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உதவிக்கு இலவச அழைப்பு எண் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அது வேறுபட்டிருந்ததால் நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவர அரசு திட்டமிடப்பட்டது. எனவே, 1950 என்ற இலவச எண் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை டயல் செய்து உதவி பெறலாம். பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்தந்த ஊர் எஸ்.டி.டி. கோட் நம்பருக்குப் பின் 1950 என்ற எண்ணை டயல் செய்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

சோஷியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சமூக ஊடகங்களில் மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என்பது போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இத்தகைய செய்திகளைப் பரப்பும் முகம் அறியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தவும், வதந்திகளைப் பரப்புவோரை தண்டிக்க சட்டங்களை பயன்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.