தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல்

election-commission-announces-dates

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு தேர்தல் நடைபெறாது எனவும் தகவல்.