State Election Commissioner

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல்

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போதைக்கு தேர்தல் நடைபெறாது எனவும் தகவல்.

எப்போது தேர்தல் நடைபெறும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது இந்தியாவை பொறுத்தவரை பல கட்டமாக தேர்தல் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு என்று தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளதால் மாநில தேர்தல் அதிகாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.