Pulwama Attack

அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை துவங்கியது

IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் வசம் இருந்த அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது அதேபோல் வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களிடம் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருந்தது. அதேபோல் சற்று நேரத்திற்கு முன்பாகவே எல்லையை வந்தடைந்தார் அபிநந்தன். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரை வரவேற்பதற்காக பஞ்சாப் எல்லையில் இந்திய மக்கள் தேசியக் கொடியோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பினார் அபிநந்தன்

Abhinandan Return India: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் இந்தியா வந்தடைந்தார். இது இந்தியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. வாகா எல்லை பகுதிக்கு அபிநந்தன் வந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் வாகா வழியாக இன்று இந்தியா வருகிறார்

Wing Commander Abhinandan: இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்பு லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன், பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

IAF Pilot: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அண்மையில் பாகிஸ்தான் அரசால் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது, மேலும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தை இந்திய தூதர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர். அதன் பின்னர் நாளை விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார் இது இந்தியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி பிரதமர் ஆவேசம்

PM Modi: இந்திய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் விமானி அபிநந்தன் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசித்து வருகிறார்.

இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல்

IAF Pilot: பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தரும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப் படை வீரர்களால் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது துரதிஷ்ட விதமாக இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். அவரை பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய தூதரக அதிகாரி நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் வசம் உள்ள அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் சூழலை இந்திய அரசு தடுக்க வேண்டும் திருமாவளவன் கோரிக்கை

கடந்த வாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது இதில் ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்தியாவில் போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி விடக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவுக்கே எங்கள் ஆதரவு, டிரம்ப் பேச்சு

US President Donald Trump: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது. 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர். இது மிகவும் கொடூரமான ஒரு சம்பவம் எனவும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் இடமளிக்கக் கூடாது எனவும், மேலும் எங்கள் ஆதரவு இந்தியாவுக்கு எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற கனிமொழி

Tamil Nadu DMK News: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக கனிமொழி களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அங்கு தேர்தல் வேலைகளை கவனிக்கவும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் நேற்று மாலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் கட்சி தலைமையிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு வந்த விமானத்திலேயே சென்னை திரும்பிய அவர் பிறகு டெல்லிக்கு விரைந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை ஒரு அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

திமுக சார்பில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு க ஸ்டாலின் கூறியதன் பெயரில் கனிமொழி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் “தீவிரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு உதவியாக தோளோடு தோள் நிற்போம்; நாட்டின் ஒற்றுமையையும் நேர்மையையும் காப்போம்” என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உறுதிமொழி எடுத்தனர்.

India Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்

Pulwama Terror Attack: மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் மத்திய, மாநில கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என்று நாடே பரபரப்பான சூழ்நிலையில் இயங்கி வருகிறது.  இதனிடையே, சற்றும் எதிர்பாராத விதமாக நேற்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பயங்கரமான தீவிரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவ படை வீரர்கள் 2,547 பேர் 78 வாகனங்களில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியை அவர்கள் அடைந்திருந்த நிலையில் திடீரென்று 360 கிலோ வெடிபொருட்கள் நிரம்பிய கார் ஒன்று அவர்கள் பயணித்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது குறிவைத்து மோதியது. காரில் இருந்த வெடிபொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியதில் ராணுவ வீரர்கள் 44 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னணியில் யார்?

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு 1998 ஆம் ஆண்டு மசூத் அஜார் என்பவனால் தொடங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிடமிருந்து பிரித்து பாகிஸ்தானுடன்  இணைப்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்கி  வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த இருபது வயதே ஆன அதில் அஹமத் தர் என்பவன் தான் நேற்று காஷ்மீரில் தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியுள்ளான். இவன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இவனோடு சேர்த்து இதுவரை மூன்று பேரை இந்த அமைப்பு மூளை சலவை செய்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

இந்த நிலையில் பாதுகாப்பு படைக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தது. அதற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானிற்கு மறைமுகமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “நீங்கள் பெரிய தவறு இழைத்து விட்டீர்கள். அதற்கு பெரிய விலையை நீங்கள் திருப்பி கொடுக்கச்செய்வோம். உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த படுவார்கள்” என்று கூறினார்.

டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமதுவை வெளியுறவுத்துறை அமைச்சர் அலுவலகம் அழைத்து தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அதேபோல பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி அஜய் பிசரியாவை தாக்குதல் குறித்து ஆலோசனை செய்ய டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, நேபால், ரஷ்யா என உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு தங்களது ஆறுதலையும் பாகிஸ்தான் சார்ந்த அமைப்பு நிகழ்த்தியுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க “இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பால் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பற்றாக்குறைதான் காரணமா?!

2547 ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் நீண்ட பயணம் செய்தது தமிழ்நாட்டிலோ கேரளாவிலோ இல்லை; ஜம்மு காஷ்மீரில். அதை மனதில் கொண்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பட்டிருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க பாதுகாப்பு பற்றாக்குறையால் நிகழ்ந்தது. யாரென்றே தெரியாத ஒருவன் திடீரென்று எங்கிருந்தோ காரில் வெடிபொருட்களுடன் வந்து நேரடி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறான் என்றால் அந்த இடத்தில் பாதுகாப்பு என்பது எவ்வளவு வலுவில்லாமல் இருந்திருக்கும். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று மக்களிடையே கேள்வி அலைகள் அடித்து கொண்டிருக்கிறது.

#indiaseeksjustice

நாட்டு மக்கள் அனைவரும் மொழி, மத, கட்சி, கலாச்சார சார்புகள் இன்றி ஒருமித்த குரலில் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். நம்மை தாக்கியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று.

என்ன செய்யப்போகிறது அரசு? பார்ப்போம் பொறுத்திருந்து.

India Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்.  Pulwama Terror Attack