அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

chief-electoral-officer-tamil-nadu

Lok Sabha Elections 2019: மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக , காங்கிரஸ் சிபிஎம்,சிபிஐ,பாஜக உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.