Trending Cinema News

ரசிகர்களுடன் படம் பார்க்க முகமூடி அணிந்து வந்த நடிகர்

நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் வெளியாகியுள்ளது. காதலர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ள இந்த படத்தை பார்க்க வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பார்ப்பதற்காக படத்தில் பயன்படுத்திய பைக்கில் திரையரங்கிற்கு முகமூடி அணிந்து வந்துள்ளார்.

தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யாருன்னு தெரியுமா?

விஜய் அட்லீயின் கூட்டணியில் உருவாக்கி வெற்றி பெற்ற படமான தெறி படத்தை தெலுங்கு ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தை சில மாதங்களாகவே நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் முடிவாகி உள்ளது. இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ள இந்த ரீமேக் படத்தில் பவன் கல்யாண் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கால்ஷீட் பிரச்சனையால் கைவிடப்பட்டது. தற்போது இந்த கேரக்டரில் தெலுங்கில முன்னணி நடிகராக இருந்து வரும் ரவி தேஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன் அப்பாவுடன் நடிக்கும் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகையின் மகள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்க இருக்கும் பாலிவுட் படத்தில் தான் அவருக்கு மனைவியாக கீர்த்தி நடிக்க உள்ளார். நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய அப்பாவின் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என கீர்த்தி சுரேஷ் புகைப்படம் போட்டோ பதிவு செய்துள்ளார்.

வைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அஞ்சலி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்

தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஸ்வாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் வெலிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது 10 வது வாரத்தை தொட்டுள்ள விஸ்வாசம் பட சென்னை ரோகினி திரையரங்கில் திரைபடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக மேலும் 2 ஷோவை அதிகரித்துள்ளது.