MK Stalin

20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ!

20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ!

வேட்பாளர்கள் தொகுதி மற்றும் பெயர்

  1. வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
  2. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
  3. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  5. காஞ்சிபுரம் (SC)– ஜி.செல்வம்
  6. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
  7. வேலூர் – கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
  8. தருமபுரி – டாக்டர் செந்தில் குமார்
  9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
  10. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
  11. நீலகிரி- ஆ.ராசா
  12. பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
  13. திண்டுக்கல் – வேலுச்சாமி
  14. கடலூர் – டி.ஆர்.வி. ரமேஷ்
  15. மயிலாடுதுறை – ராமலிங்கம்
  16. தஞ்சாவூர் – பழனிமாணிக்கம்
  17. சேலம் – எஸ்.ஆர். பார்த்திபன்
  18. தூத்துக்குடி – கனிமொழி
  19. தென்காசி (SC) – தனுஷ்குமார்
  20. திருநெல்வேலி – ஞான திரவியம்

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி

அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிமுக குறைந்தது பத்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

மதிமுவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்க வாய்ப்பு

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதியம் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து மு க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த ஒரு தொகுதியிலும் வைகோ போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகிறது, மாறாக ராஜ்யசபா சீட்டிற்கு வைகோ முயற்சிப்பார் என தெரிகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை

கடந்த தேர்தலில் போதிய வாக்கு சதவீதத்தை பெறாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி இழந்துள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின் படி குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்தால் மட்டுமே தங்கள் சின்னத்தை தக்கவைத்து கொள்ள முடியும், அதே நேரம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சிக்கு சின்னம் தேர்ந்தேடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி தமிழ்நாடு இளைஞர் கட்சி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் அந்த கட்சியின் கோரிக்கையை ஏற்று மோதிரம் சின்னத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னதில் போட்டியிடும் என பேசப்பட்டு வந்த நிலையில் அவர்களது மோதிரம் சின்னமும் முடக்கப்பட்டதால் நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிறது.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

திருச்சி தொகுதியை பெற திருநாவுக்கரசர் முயற்சி

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி போன்ற தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் திருச்சி தொகுதியையும் எங்களுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கையும் திமுகவிடம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அதில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதே தொகுதியை மதிமுகவும் கேட்டு வருவதால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது, மிக விரைவில் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு யாருக்கு எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் விசிகே போட்டியா?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சின்னம் இருப்பதால் மற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் “கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்” என்றார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு வாய்ப்பு அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாகவும், இருப்பினும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதால் பாஜக மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்பதால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்று பட்டியல் வெளியாகலாம் என தகவல் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி

மக்களவைத் தேர்தலில் இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என வைகோ கணித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் நானும் என் கழகத் தோழர்களும் பிரச்சாரம் செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை, ஸ்டாலின் உறுதி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எங்கள் அணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும் திமுக 20 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டதால் மீண்டும் அதிமுகவோடு தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து

வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் மாநாடு

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் வருகின்ற மார்ச் 13ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நிகழ்விற்கு தலைமை ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

தேமுதிகவுக்கு சீட் இல்லை துரைமுருகன் தகவல்

Lok Sabha 2019 Alliances: மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த வேளையில் திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக பொருளாளர் சுதீஷ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதா என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என பதிலளித்துள்ளார். தற்போது தேமுதிக அதிமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சிதம்பரம் தொகுதியை கேட்கும் காங்கிரஸ்

DMK-Congress Alliances: திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சார்பில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தருணத்தில் யாருக்கு எந்த தொகுதி என்ற ஆலோசனையும் துவங்கியுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியை பல மாதங்களுக்கு முன்னதாகவே திருமாவளவன் கேட்டு வருகிறார். மேலும் 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களிலும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. திமுக தலைமை யாருக்கு அந்த தொகுதியை ஒதுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வாரிவழங்கிய திமுக?

20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வாரிவழங்கிய திமுக?

அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்

DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி

DMK-MDMK Alliances: திமுக கூட்டணியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். மறுமலர்ச்சி திராவிட கழகம் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

20 இடங்களில் போட்டியிடும் திமுக

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி வருகிறது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு போக தனக்கென திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை விட்டுகொடுக்கும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கபட்டன. ஆனால் 8 இல் மட்டுமே காங்கிரஸ் வேற்றி பெற்றது. இதே நிலைமை தற்போதும் நடந்துவிடுமோ என சிலர் அஞ்சுகின்றனர்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா போட்டி?

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும் 2009 மக்களவைத் தேர்தலிலும் ஆ ராசா நீலகிரியில் தான் போட்டியிட்டார். 2009இல் மகத்தான வெற்றியை பதிவு செய்திருந்தார். அதேபோல் 2014லிலும் நீலகிரி தொகுதியில் தான் போட்டியிட்டடார். ஆனால் அப்போது வெற்றி கிட்டவில்லை. இம்முறையும் ஆ ராசா நீலகிரி தொகுதியில் தான் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பாமகவால் அதிமுகவுக்கு பலவீனம் ஏற்படும் திருமாவளவன் கருத்து

Elections 2019 Tamil Nadu: அதிமுகவும் பாஜவும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என அனைவருமே கூறிவந்தனர், ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைந்தது சில பாமக நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியாய் அமைந்தது, அதனால் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர் தனது பதவியை ராஜினாமா செய்தனர். பாமக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளதை குறித்து கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன் “ பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பலவீனம் ஏற்படும்” என்று பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்துள்ளார்.

தொகுதிகளை வாரிவழங்கும் திமுக…

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்த வரை ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது, அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன, அதோடு சில அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அள்ளி கொடுத்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கியதுவம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது காங்கிரஸ் கட்சிதான், இது தேசிய கட்சி, மத்தியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி, இம்முறை அவர்கள் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்தே தொடர்கிறது, மேலும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விசிகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், எனவும் எங்கள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கபட வேண்டும், அதிலும் நானே போட்டியிடுவேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், இந்த கோரிக்கையை திமுக ஏற்கும் என எதிர்பார்த்த நிலையில், அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதியையும் திமுக வழங்கியுள்ளது, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை விசிக கேட்கும் என தெரிகிறது, விசிக தொண்டர்கள் நம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிக்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பது தொண்டர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுகவின் தோழமை கட்சிகளாக விளங்கிய மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை தர முன்வந்துள்ளது, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?

கூட்டணி அமைத்தால் தேர்தலை சந்திப்பதை விட தொகுதி பங்கீடுவது தான் சவாலாக இருக்கும், அதே நிலைதான் தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது, மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், போன்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகளையும், மேலும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும், அந்த வகையில் ஏற்கனவே 19 தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது திமுக, மேலும் ஐஜேகே போன்ற கட்சிகளும் உள்ளனர், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தால் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

கருணாநிதி அவர்கள் இருந்த போதே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டு 16 தொகுதிகளில் மட்டுமெ திமுக நின்றது, இருப்பினும் தற்போதைய சூழலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சரியாக கையாண்டுள்ளாரா என்பதே மீதமுள்ள கதை.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டி

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவை தொகுதியில் திமுக மகளிரணி செயலரும், ராஜ்ய சபா எம்,பியுமான கனிமொழி நிச்சயம் போட்டியிடுவார் என்ற தகவல் சமீப காலங்களில் பேசப்பட்டு வந்தது, அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக பிரதிநிதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை கட்சி தலைமைக்கு கனிமொழி அளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர், அதன் மூலம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மதிமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு

DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு திமுக வழங்கி வருகிறது, அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மதிமுகவிற்கும் இரண்டு தொகுதிகள் தான் வழங்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. திமுகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மறுமலர்ச்சி திராவிட கழக பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது, மக்களவை தேர்தலில் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதியில் என்பது குறித்த அலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் சிபிஐ கட்சியின் மாநில பொருப்பாளர் திரு. முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டது, சிபிஐ கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

Lok Sabha Elections 2019 Tamil Nadu: திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது. சிதம்பரம் தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பெயர்கள் இப்போது வெளியிடப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

நாளை 66வது பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார் மு க ஸ்டாலின்

DMK President M.K Stalin: திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் நாளை 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் இன்று மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மார்ச் ஒன்றாம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அதோடு உங்களின் ஒருவனான என்னுடைய பிறந்த நாளும் அன்றுதான் உங்கள் பேரன்புமிக்க ஆதரவுடன் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது எனக் குறிப்பிட்டுள்ளார். வருகின்ற மக்களவைத் தொகுதிகளில் வெற்றிக் கனிகளை பறித்து தாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து

MDMK தமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார். அண்மையில் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சென்ற அவர் வரும் மக்களவைத் தேர்தலில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை

Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

புயல்வேக பிரச்சாரத்திற்கு வைகோ தயார் ஸ்டாலின் பேச்சு

Lok Sabha Elections 2019: 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய புயல்வேக பயணத்திற்கு வைகோ தயாராகிவிட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கப்படும். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்” 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம் செய்வார்” என்றார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

DMK Alliances: மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகுதியில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

ஸ்டாலின் விஜய்காந்திடம் அரசியல் பேசினார் பிரேமலதா தகவல்

Lok Sabha Elections 2019: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் அண்மையில் சென்னை திரும்பினார். அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடிகர் ரஜினிகாந்த், திருநாவுகரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் அரசியல் குறித்தோ கூட்டணி குறித்தோ ஏதுவும் பேசவில்லை என கூறினார் ஸ்டாலின். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேமலதா இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது நிச்சாயம் அரசியல் பேசுவார்கள் அது இயல்பு என்றார். அதே போல் தான் ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பும் இருந்தது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

இது மக்கள் விரோத கூட்டணி கே.எஸ். அழகிரி தாக்கு

Lok Sabha Elections 2019: தற்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி விமர்சித்துள்ளார். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியே மக்கள் நலன் சார்ந்த கூட்டணி எனவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் மக்கள் நன்மையடைவார்கள் எனவும் கூறியுள்ளார்.

பாஜகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

Lok Sabha Elections 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது என விமர்சித்தார். மேலும் தேர்தல் வரும் சமயத்தில் தான் பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதாக குற்றம்சாட்டினார்.

புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தேர்வு

Puducherry: திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது . புதுவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தத் தொகுதியின் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிகளின் விதிமுறைகள் தற்போதைய எம்எல்ஏக்கள் யாரும் போட்டியிடகூடாது என்பதுதான் இருப்பினும் விதிகளில் தளர்வு செய்து இவரை போட்டியிடுவார் எனவும் தெரிகிறது

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

DMK Lok Sabha Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் அறிக்கை இன்றே இறுதி செய்யப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக

DMK Lok Sabha Election Manifesto: வருகின்ற மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என விரும்பும் மக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது யோசனைகளையும், கனவு திட்டங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு உறுதியானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மற்ற மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், தற்பொழுது திமுக காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தமிழகத்தில் காங்கிரஸின் மீதான மக்களின் பார்வை சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு திமுகவால் எடுக்கப்பட்ட முடிவு என்றே சொல்லலாம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குளறுபாடுகளும் மன கசப்புகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். அதை உணர்ந்திருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸிற்கு போதும் என்ற அளவிற்கு அள்ளி வழங்கியிருக்கிறது.

காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக

Lok Sabha Elections 2019: காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ள கூட்டணி ஒப்பந்தப்படி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம் பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

காங்கிரஸ்க்கு 10 தொகுதியா ?

Breaking News Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, தொகுதி பங்கீடு பொறுத்தவரை காங்கிரஸ்க்கு 8 தொகுதி வழங்க தயார் என திமுக தலைமை அறிவித்திருந்தது, ஆனால் காங்கிரஸ் இரட்டை இலக்கில் தொகுதிகளில் கேட்டது, நிறைவாக 10 தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்கே தரப்படும் என தெரிகிறது, மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளது.

பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? தமிழில் பேச வேண்டும், திருக்குறளை மேற்கோள் காட்ட வேண்டுமென தெரிந்த பிரதமருக்கு இந்த மரபு தெரியாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினிகாந்த் மகள் திருமணம் – குவியும் பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடியை இன்று மணந்தார். இவர்களது திருமணம் சென்னை லீலா பேலஸில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ம தி மு க பொது செயலாளர் வைகோ, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல ஹாசன் என அரசியல் பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

நாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து திருமண சடங்குகளை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்து திருமண மரபுகள் பற்றி கிண்டலாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “திருமணத்தின் போது மணமக்களை தரையில் உட்கார வைத்து; அந்த மணமக்களின் கண்கள் மட்டும் அல்லாது சுற்றி இருப்பவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரும்படி தீ மூட்டி; தனக்கும் அர்த்தம் தெரியாத, வந்திருப்பவர்களுக்கும் புரியத மந்திரங்களை புரோகிதர் சொல்லிக்கொண்டு இருப்பார்” என்று கூறினார். இது இந்து மதத்தையும், மக்களின் கடவுள் நம்பிக்கையையும் அவமதிப்பது போல் உள்ளது என விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன.

அரசின் பணத்தை வீணடித்ததும்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய சாதனை -ஸ்டாலின்

நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் என்பதன் மூலமே, இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கை காய்ந்து வெளுத்து விட்டது என்று திமுக தலைவர் முகஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில், இரு நாட்கள் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக சென்னையில் உள்ள முச்சந்திகளிலும், சாலை சந்திப்புகளிலும் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வைத்து விளம்பரம் செய்து- அரசின் பணத்தை வீணடித்ததும்தான் இந்த மாநாட்டின் முக்கிய சாதனை குறிப்பிட்டுள்ளார்.

பயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்

கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் “ஒற்றுமை இந்தியா மாநாடு” என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான், தற்போது எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒன்றுமையாக இணைந்து செயல்பட்டால் மக்கள் விரோத கட்சியான பாஜகவை அகற்றலாம் எனக் கூறினார்.