Kanimozhi

20 இடங்களில் போட்டியிடும் திமுக

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி வருகிறது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு போக தனக்கென திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை விட்டுகொடுக்கும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கபட்டன. ஆனால் 8 இல் மட்டுமே காங்கிரஸ் வேற்றி பெற்றது. இதே நிலைமை தற்போதும் நடந்துவிடுமோ என சிலர் அஞ்சுகின்றனர்.

தொகுதிகளை வாரிவழங்கும் திமுக…

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்த வரை ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது, அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன, அதோடு சில அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அள்ளி கொடுத்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கியதுவம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது காங்கிரஸ் கட்சிதான், இது தேசிய கட்சி, மத்தியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி, இம்முறை அவர்கள் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்தே தொடர்கிறது, மேலும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விசிகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், எனவும் எங்கள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கபட வேண்டும், அதிலும் நானே போட்டியிடுவேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், இந்த கோரிக்கையை திமுக ஏற்கும் என எதிர்பார்த்த நிலையில், அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதியையும் திமுக வழங்கியுள்ளது, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை விசிக கேட்கும் என தெரிகிறது, விசிக தொண்டர்கள் நம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிக்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பது தொண்டர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுகவின் தோழமை கட்சிகளாக விளங்கிய மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை தர முன்வந்துள்ளது, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?

கூட்டணி அமைத்தால் தேர்தலை சந்திப்பதை விட தொகுதி பங்கீடுவது தான் சவாலாக இருக்கும், அதே நிலைதான் தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது, மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், போன்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகளையும், மேலும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும், அந்த வகையில் ஏற்கனவே 19 தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது திமுக, மேலும் ஐஜேகே போன்ற கட்சிகளும் உள்ளனர், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தால் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

கருணாநிதி அவர்கள் இருந்த போதே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டு 16 தொகுதிகளில் மட்டுமெ திமுக நின்றது, இருப்பினும் தற்போதைய சூழலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சரியாக கையாண்டுள்ளாரா என்பதே மீதமுள்ள கதை.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டி

Lok Sabha Elections 2019: வருகின்ற மக்களவை தொகுதியில் திமுக மகளிரணி செயலரும், ராஜ்ய சபா எம்,பியுமான கனிமொழி நிச்சயம் போட்டியிடுவார் என்ற தகவல் சமீப காலங்களில் பேசப்பட்டு வந்தது, அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக பிரதிநிதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை கட்சி தலைமைக்கு கனிமொழி அளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர், அதன் மூலம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

DMK Lok Sabha Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் அறிக்கை இன்றே இறுதி செய்யப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற கனிமொழி

Tamil Nadu DMK News: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக கனிமொழி களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அங்கு தேர்தல் வேலைகளை கவனிக்கவும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் நேற்று மாலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியதும் கட்சி தலைமையிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு வந்த விமானத்திலேயே சென்னை திரும்பிய அவர் பிறகு டெல்லிக்கு விரைந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை ஒரு அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.

திமுக சார்பில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மு க ஸ்டாலின் கூறியதன் பெயரில் கனிமொழி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

இதையடுத்து நடைபெற்ற அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் “தீவிரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு உதவியாக தோளோடு தோள் நிற்போம்; நாட்டின் ஒற்றுமையையும் நேர்மையையும் காப்போம்” என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உறுதிமொழி எடுத்தனர்.

Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறிய அவர்; திமுக சார்பில் தான் தேர்தலில் நிற்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

AAP Delhi Breaking News: டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் – ஓர் சிறப்பு பார்வை

AAP Delhi Breaking News:எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மோடி அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்துவது வாடிக்கையாகி விட்டது

சில மாதங்களுக்கு முன்பு அனைத்து எதிர்கட்சிகளையும் கூட்டி பொதுக்கூட்டம் ஒன்றை ராகுல் காந்தி நடத்தினார்.

அதையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜீ 22 எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் தானும் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த போவதாக கூறினார்.

அதன்படி டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மம்தாவின் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தி மு க எம் பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜீ, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ம.ஜ.த தேசிய தலைவர் தேவ கவுடா, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

மம்தா பானர்ஜீ பேசுகையில், “பா ஜ க ஆட்சியில் டெமோகிரசி மோடிகிரசி ஆகிவிட்டது. இன்று தான் மக்களவையில் மோடிக்கு கடைசி நாள். இன்னும் 20 நாட்கள் தான்; அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியாது. மேற்கு வங்கத்தில் என்ன முயற்சிகள் செய்தாலும் மோடி அரசு கால்பதிக்க முடியாது. அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெல்லும்.

கண்ணாடியில் உங்களையே பாருங்கள்; ராவணனுக்கும் 56 இன்ச் மார்பு தான் இருந்தது. ஷோலே திரைப்படத்தில் தூங்கிவிடு இல்லை என்றால் கஃபர் சிங்க் வந்துவிடுவான் என்றொரு வசனம் உண்டு. இந்தியாவிற்கு மோடி தான் கஃபர் சிங். அவரை வைத்து தான் அந்த வசனம் ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தற்பொழுது சொல்லப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “ மோடி ஜி நீங்கள் இந்தியாவின் பிரதமர். பாகிஸ்தானிற்கு அல்ல. எந்த இந்திய பிரதமராவது டெல்லியையும் கொல்கத்தாவையும் பாதிப்பிற்குள்ளாக்க நினைப்பாரா?” என்று கூறினார்.

பரூக் அப்துல்லா பேசுகையில், “கடவுள் ராமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கு மட்டும் தான் சொந்தமானவரா? அவர் அனைவருக்கும் பொதுவானவர். உங்கள் மறைவிற்கு பின் நீங்கள் அவரிடம் செல்லும் பொழுது அவர் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் மோடி அரசுக்கு எதிராக இவ்வாறு எதிர்க்கட்சிகள் கை கோர்த்திருப்பது பா ஜ க அரசிற்கு சருக்கலாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், ரபேல் விமான கொள்முதல், விவசாயிகள் பிரச்சனை என எதிர்க்கட்சிகளின் வாயில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மோடி அரசுக்கு இது இன்னொரு பாரமே

ஆம் ஆத்மி பார்ட்டி சார்பில் டெல்லியில் டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

AAP Rally In Delhi News: கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த சோனியா, ராகுல்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பேரணியில் தேசிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அங்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். திராவிட முன்னேற்றக் கழக சார்பில் கனிமொழி எம்பி நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இது மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னோட்டமாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.