JACTO GEO

போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால், 9 நாட்களாக பல அரசுப் பள்ளி வகுப்புகள் பாதிக்கப்பட்டன. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும், மாதிரி தேர்வுகளும் பல பள்ளிகளில் சரியாக நடைபெறவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தேவைக்கு ஏற்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றியும் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு ஊழியர்களுக்காக, நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, அமல்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு ஊழியரும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் பணியை புறக்கணித்து போராட்டம்

ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு உள்ளனர். நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வரும் பிப்.1ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4-வது நாளாக தொடரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தி வருகிறது. கடந்த 22ம் தேதி தொடங்கிய இவர்களது போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால் அந்த பணியிடத்தில் ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிகளை நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.