சென்னையில் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் பணியை புறக்கணித்து போராட்டம்

minister-jayakumar

ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு உள்ளனர். நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வரும் பிப்.1ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.