போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

jacto geo protest

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு ஊழியர்களுக்காக, நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, அமல்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு ஊழியரும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.