போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள்

special classes on Saturday and Sunday

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால், 9 நாட்களாக பல அரசுப் பள்ளி வகுப்புகள் பாதிக்கப்பட்டன. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும், மாதிரி தேர்வுகளும் பல பள்ளிகளில் சரியாக நடைபெறவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தேவைக்கு ஏற்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து சிறப்பு வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றியும் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.