Congress

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கன்னியாகுமாரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி இருக்கிறது அதன் படி

திமுக

  1. சென்னை வடக்கு
  2. சென்னை தெற்கு
  3. மத்திய சென்னை
  4. ஸ்ரீபெரும்புதூர்
  5. காஞ்சிபுரம் (தனி)
  6. அரக்கோணம்
  7. வேலூர்
  8. தர்மபுரி
  9. திருவண்ணாமலை
  10. கள்ளக்குறிச்சி
  11. சேலம்
  12. நீலகிரி (தனி)
  13. பொள்ளாச்சி
  14. திண்டுக்கல்
  15. கடலூர்
  16. மயிலாடுதுறை
  17. தஞ்சாவூர்
  18. தூத்துக்குடி
  19. தென்காசி (தனி)
  20. திருநெல்வேலி

காங்கிரஸ்

  1. புதுச்சேரி
  2. சிவகங்கை
  3. கன்னியாகுமாரி
  4. விருதுநகர்
  5. தேனி
  6. திருச்சிராப்பள்ளி
  7. கரூர்
  8. கிருஷ்ணகிரி
  9. ஆரணி
  10. திருவள்ளூர் (தனி)

விடுதலை சிறுத்தைகள் கட்சி

  1. விழுப்புரம் (தனி)
  2. சிதம்பரம் (தனி)

மதிமுக

  1. ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

  1. மதுரை
  2. கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

  1. திருப்பூர்
  2. நாகை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

  1. ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

  1. நாமக்கல்

ஐஜேகே

  1. பெரம்பலூர்

மேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணி ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது கட்சிகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது, தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் தொகுதி பங்கீடு, யாருக்கு எந்த தொகுதிகள் என்பது போன்ற அலோசனைகளையெல்லாம் நிறைவு செய்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சார பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 9 கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பிரதமரை கடுமையாக சாடிய ராகுல்

பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மாநில கட்சிகளை மத்திய பாஜக அரசு அடக்குமுறை செய்ய முயற்ச்சிப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தை டெல்லியில் இருந்து பாஜக ஆண்டுவருவதாகவம் கூறினார். மேலும் 2014 நாட்டு மக்களிடம் மோடி என்ன வாக்குறுதிகளை தந்தாரோ எதையுமே அவர் நிறைவேற்றவில்லை.

15 லட்சம் ஏங்கே?

2014 மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய மோடி அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துகிறேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்து 5 வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றார் ராகுல்.

மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எச்.ஏ.எல் என்ற நிறுவனத்தின் மூலமாக 526 கோடி ரூபாய்க்கு போர் விமானம் வாங்க அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய மோடி அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தற்போது ஒரு போர் விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் மூலம் ஊழல் செய்த மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது என்றார்.
45 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம்

மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கான அரசு. தற்போதைய ஆட்சியில் ஏழைமக்களும், இளைஞர்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றார். மேலும் கடந்த 45 வருடகாலம் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு செய்து தரப்படும் எனக் கூறினாரே தவிர அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பது தான் உண்மை.
போட்டி போட்டு புகழ்ந்த ராகுல் மற்றும் ஸ்டாலின்

பிரச்சார பொதுகூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நமது நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் அவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பதவியேற்று கொள்வார் என கூறினார். பின்னர் தனது உரையை துவங்கிய ராகுல் காந்தி தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இரு தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இது எந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் அளிக்கும் என்பதை மக்கள் விரைவில் தெரியப்படுத்துவார்கள்.

மோடியா ? ராகுலா ?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தான் ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.

மே23 வரை காத்திருப்போம்….

பொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு

மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி மக்களுக்கு கொடுத்திருந்தார். மோடி அவர்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 இலட்சம் தருவதாகச் சொன்னார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும் தெரிவித்தார். அவர் கூறிய எதையுமே செயல் படுத்தவில்லை என ராகுல் குற்றம் சாட்டினார்.

மோடியை கட்டித் தழுவியது ஏன்? ராகுல் விளக்கம்

சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ வெறுப்போ கிடையாது எனவும் எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு அழகான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவே நாடாளுமன்றத்தில் அவரைக் கட்டியணைத்தேன் என ராகுல் விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை

கன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி

அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிமுக குறைந்தது பத்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு வாய்ப்பு அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாகவும், இருப்பினும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாட்டின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதால் பாஜக மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்பதால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து இன்று பட்டியல் வெளியாகலாம் என தகவல் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் மாநாடு

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் வருகின்ற மார்ச் 13ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நிகழ்விற்கு தலைமை ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வாரிவழங்கிய திமுக?

20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வாரிவழங்கிய திமுக?

20 இடங்களில் போட்டியிடும் திமுக

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கி வருகிறது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு போக தனக்கென திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த காலங்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை விட்டுகொடுக்கும். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கபட்டன. ஆனால் 8 இல் மட்டுமே காங்கிரஸ் வேற்றி பெற்றது. இதே நிலைமை தற்போதும் நடந்துவிடுமோ என சிலர் அஞ்சுகின்றனர்.

தொகுதிகளை வாரிவழங்கும் திமுக…

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது, திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்த வரை ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது, அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன, அதோடு சில அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அள்ளி கொடுத்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கியதுவம் வாய்ந்த கட்சியாக கருதப்படுவது காங்கிரஸ் கட்சிதான், இது தேசிய கட்சி, மத்தியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி, இம்முறை அவர்கள் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்தே தொடர்கிறது, மேலும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விசிகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் திமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், எனவும் எங்கள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கபட வேண்டும், அதிலும் நானே போட்டியிடுவேன் எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், இந்த கோரிக்கையை திமுக ஏற்கும் என எதிர்பார்த்த நிலையில், அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதியையும் திமுக வழங்கியுள்ளது, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை விசிக கேட்கும் என தெரிகிறது, விசிக தொண்டர்கள் நம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இரு தொகுதிக்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பது தொண்டர்களை இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுகவின் தோழமை கட்சிகளாக விளங்கிய மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது, சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை தர முன்வந்துள்ளது, ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.

திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும்?

கூட்டணி அமைத்தால் தேர்தலை சந்திப்பதை விட தொகுதி பங்கீடுவது தான் சவாலாக இருக்கும், அதே நிலைதான் தற்போது திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது, மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், போன்ற கட்சிகளுக்கு 8 தொகுதிகளையும், மேலும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும், அந்த வகையில் ஏற்கனவே 19 தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது திமுக, மேலும் ஐஜேகே போன்ற கட்சிகளும் உள்ளனர், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்தால் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற சந்தேகம் எழுகிறது.

கருணாநிதி அவர்கள் இருந்த போதே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துவிட்டு 16 தொகுதிகளில் மட்டுமெ திமுக நின்றது, இருப்பினும் தற்போதைய சூழலில் தொகுதி பங்கீட்டை ஸ்டாலின் சரியாக கையாண்டுள்ளாரா என்பதே மீதமுள்ள கதை.

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே எனது ஆதரவு தமிமுன் அன்சாரி பேச்சு

Election 2019: கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை தேர்தலில் பாமகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். மேலும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவு காங்கிரஸ் கூட்டணிக்கு எனவும் மதச்சார்பற்ற அணிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

DMK Alliances: மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகுதியில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா?

Lok Sabha 2019: தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்குவதற்கு அதிமுக முன்வந்துள்ளது. அதுவும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தான் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பதால் மயிலாடுதுறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.

புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தேர்வு

Puducherry: திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது . புதுவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தத் தொகுதியின் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிகளின் விதிமுறைகள் தற்போதைய எம்எல்ஏக்கள் யாரும் போட்டியிடகூடாது என்பதுதான் இருப்பினும் விதிகளில் தளர்வு செய்து இவரை போட்டியிடுவார் எனவும் தெரிகிறது

திமுக – காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு உறுதியானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மற்ற மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், தற்பொழுது திமுக காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தமிழகத்தில் காங்கிரஸின் மீதான மக்களின் பார்வை சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு திமுகவால் எடுக்கப்பட்ட முடிவு என்றே சொல்லலாம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குளறுபாடுகளும் மன கசப்புகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். அதை உணர்ந்திருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸிற்கு போதும் என்ற அளவிற்கு அள்ளி வழங்கியிருக்கிறது.

காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக

Lok Sabha Elections 2019: காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ள கூட்டணி ஒப்பந்தப்படி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம் பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக தகவல்

Lok Sabha Elections 2019: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அதில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் போட்டியிடும் எனவும் அதில் போட்டியிட்டு தற்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடிப்போம் எனவும் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த 10 தொகுதிகளில் நிச்சயம் காங்கிரஸ் கன்னியாகுமரியில் போட்டியிடும் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் தகவல்.

எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

Lok Sabha Election 2019 Latest News & Updates:  அதிமுக தலையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது, இதனை திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர், கொள்ளைக்கு முரணான கூட்டணி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை “ இது எதிரிகளை வீழ்த்தும் கூட்டணியே தவிர, கொள்கைக்கான கூட்டணி அல்ல’ என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Lok Sabha Election 2019 Latest News: எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

காங்கிரஸ்க்கு 10 தொகுதியா ?

Breaking News Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, தொகுதி பங்கீடு பொறுத்தவரை காங்கிரஸ்க்கு 8 தொகுதி வழங்க தயார் என திமுக தலைமை அறிவித்திருந்தது, ஆனால் காங்கிரஸ் இரட்டை இலக்கில் தொகுதிகளில் கேட்டது, நிறைவாக 10 தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்கே தரப்படும் என தெரிகிறது, மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்? – மோடி கேள்வி

தமிழகம் வந்த பிரதமர் மோடி திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “கலப்பட மருந்தை போன்று ஆபத்தானது கலப்பட கூட்டணி. எதிர்க்கட்சிகளின் கலப்படமான கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள். என்னை தோற்கடிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் – தேவசம் போர்டு ஒப்புதல்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு சபரிமலை தேவசம் போர்டு ஒப்புக்கொண்டுள்ளது. இத்தனை நாட்கள் பின்பற்றி வந்த தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாகவும் தேவசம்போர்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

சர்ச்சையான சபரிமலை தீர்ப்பு – மறுசீராய்வு மனு இன்று விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இருந்த தடையை நீக்கி அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. அதிலிருந்து சபரிமலை தன் இயல்பு நிலையை இழந்து விட்டது. பல பெண்களின் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு இரண்டு பெண்கள் மட்டும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து விட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல பெண்கள் சென்று வந்து விட்டார்கள். இந்த விவகாரம் ஒருபுறமிருக்க, அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் கீழ் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளது.

மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான 272 இடங்கள் கிடைக்காது: கருத்து கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரிபப்ளிக் டி.வி. மற்றும் ‘சி’ ஓட்டர்ஸ், இந்தியா டுடே, ஏ.பி.பி. மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பலம் மற்றும் வெற்றி பெறும் தொகுதி குறித்து கருத்து கணிப்பு நடத்தியுள்ளன. இந்த கருத்து கணிப்பு முடிவுகளின் படி, மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான இடங்கள், அதாவது 272 தொகுதிகள் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவை தவிர அகில இந்திய பொது செயலாளராக வேணுகோபாலும், உத்தர பிரதேச மேற்கு மாநில பொது செயலாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும், அரியானாவுக்கான பொது செயலாளராக குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.