Breaking News

இந்தியாவுக்கே எங்கள் ஆதரவு, டிரம்ப் பேச்சு

US President Donald Trump: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது. 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர். இது மிகவும் கொடூரமான ஒரு சம்பவம் எனவும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் இடமளிக்கக் கூடாது எனவும், மேலும் எங்கள் ஆதரவு இந்தியாவுக்கு எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலும், வெப்பமடைவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இதனால் புகையால் எற்படும் மாசு குறையும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக 2000 பேருந்துகள் இயக்க பட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 இடங்களிலும் காங்கிரஸ் போட்டி – ஷீலா திக்க்ஷித்

ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி முறிவிற்கு பின், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது என்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் ஷெய்லா திக்க்ஷித் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது 88 வயதில் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார். வயது முதிர்வை அடுத்து நீண்ட காலம் உடல்நல குறைவால் பெர்னாண்டஸ் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இவர் கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர் என்பதுடன் தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார்.