முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

George Fernandes died

முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது 88 வயதில் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார். வயது முதிர்வை அடுத்து நீண்ட காலம் உடல்நல குறைவால் பெர்னாண்டஸ் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இவர் கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர் என்பதுடன் தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார்.