சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச தடை விதித்தது: ஐசிசி

Ambati Rayudu banned

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே சமீபத்தில் நடந்த போட்டியில் பந்து வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு முறை குறித்து அம்பயர்கள் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து 14 நாட்களுக்குள் அவரை பவுலிங் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 14 நாட்கள் காலம் முடிவடைந்த நிலையில், அவர் பவுலிங் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பதால், சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீச தடை விதிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.