new zealand vs india 01/28/2019

இந்தியாவுக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 200வது போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகள் இடையேயான 5-வது ஒருநாள் போட்டி வரும் 3-ம் தேதி நடக்க உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 92 ரன்களில் இந்தியா ஆல் அவுட்

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச தடை விதித்தது: ஐசிசி

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே சமீபத்தில் நடந்த போட்டியில் பந்து வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு முறை குறித்து அம்பயர்கள் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து 14 நாட்களுக்குள் அவரை பவுலிங் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 14 நாட்கள் காலம் முடிவடைந்த நிலையில், அவர் பவுலிங் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பதால், சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீச தடை விதிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.

3-வது ஒருநாள் போட்டி: 18 ஓவரில் 80/1 ரன்களை இந்தியா

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கோலி 17 ரன்களுடனும், ரோகித் சர்மா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து பேட்ஸ்மேன் டைலர் 93 ரன்கள் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் சமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், சாஹல், பாண்டேயா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.