Ambati Rayudu

ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 252 ரன்களை எடுத்தது. போட்டியை வெல்லும் முனைப்போடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 90 ரன்கள் விளாசிய ராயுடு ஆட்ட நாயகன் விருதையும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமத் ஷமிக்கு தொடரின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது

சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச தடை விதித்தது: ஐசிசி

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே சமீபத்தில் நடந்த போட்டியில் பந்து வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு முறை குறித்து அம்பயர்கள் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து 14 நாட்களுக்குள் அவரை பவுலிங் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 14 நாட்கள் காலம் முடிவடைந்த நிலையில், அவர் பவுலிங் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பதால், சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீச தடை விதிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.