மின்னணு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை: மோடி அறிவிப்பு

E-Passport

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. ‘புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்பதை வலியுறுத்தி நடக்கும் இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘சிப்’ அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். அனைத்து இந்திய தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும் என்றார்.