PM Modi

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கன்னியாகுமாரியில் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணி ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது கட்சிகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது, தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் தொகுதி பங்கீடு, யாருக்கு எந்த தொகுதிகள் என்பது போன்ற அலோசனைகளையெல்லாம் நிறைவு செய்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சார பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 9 கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பிரதமரை கடுமையாக சாடிய ராகுல்

பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். மாநில கட்சிகளை மத்திய பாஜக அரசு அடக்குமுறை செய்ய முயற்ச்சிப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தை டெல்லியில் இருந்து பாஜக ஆண்டுவருவதாகவம் கூறினார். மேலும் 2014 நாட்டு மக்களிடம் மோடி என்ன வாக்குறுதிகளை தந்தாரோ எதையுமே அவர் நிறைவேற்றவில்லை.

15 லட்சம் ஏங்கே?

2014 மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய மோடி அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துகிறேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்து 5 வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றார் ராகுல்.

மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எச்.ஏ.எல் என்ற நிறுவனத்தின் மூலமாக 526 கோடி ரூபாய்க்கு போர் விமானம் வாங்க அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய மோடி அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு தற்போது ஒரு போர் விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் மூலம் ஊழல் செய்த மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது என்றார்.
45 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம்

மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கான அரசு. தற்போதைய ஆட்சியில் ஏழைமக்களும், இளைஞர்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றார். மேலும் கடந்த 45 வருடகாலம் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு செய்து தரப்படும் எனக் கூறினாரே தவிர அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பது தான் உண்மை.
போட்டி போட்டு புகழ்ந்த ராகுல் மற்றும் ஸ்டாலின்

பிரச்சார பொதுகூட்டத்தில் பேசிய ஸ்டாலின் நமது நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் அவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பதவியேற்று கொள்வார் என கூறினார். பின்னர் தனது உரையை துவங்கிய ராகுல் காந்தி தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இரு தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இது எந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் அளிக்கும் என்பதை மக்கள் விரைவில் தெரியப்படுத்துவார்கள்.

மோடியா ? ராகுலா ?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தான் ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.

மே23 வரை காத்திருப்போம்….

ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார். இவர்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து இருப்பார்கள் என கருதப்படுகிறது.

பொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு

மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி மக்களுக்கு கொடுத்திருந்தார். மோடி அவர்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 இலட்சம் தருவதாகச் சொன்னார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும் தெரிவித்தார். அவர் கூறிய எதையுமே செயல் படுத்தவில்லை என ராகுல் குற்றம் சாட்டினார்.

ராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பற்றி கருத்து தெரிவித்த ஜி.கே வாசன் ராகுலை விட மோடி தான் சூப்பர் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் மதசார்பற்ற கூட்டணி எனவும் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது தான் அதற்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம் என்றார்.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் 6.1% ஆக உயர்வு !

Unemployment Rate At Worst In 45 Years; Rises To 6.1% In 2017-18

மத்திய அரசின் தகவல் குறிப்புகளுக்கு நேர் எதிர் மறையாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகவும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

NSSO (நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ்) – இன் PLFS (பீரியாடிக் லேபர் போர்ஸ் சர்வே) படி இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம், 2017 – 2018 ஆம் ஆண்டுகளில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது. படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

நவம்பர் 2016-இல் நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பிற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட விவர சேகரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Unemployment in India 2017-2018: 45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம்

கடைசியாக இது போன்று 1972 – 1973 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி ஆட்சியின்போது வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்துள்ளது. 2012 – 2013 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2.2 விழுக்காடு குறைந்து, மறுபடியும் பா ஜ க ஆட்சியில் இப்பொழுது உச்சத்தை தொட்டுள்ளது.

2012 – 2013 ஆம் ஆண்டுகளில் 5 சதவீதமாக இருந்த கிராமப்புற ஆண்களின் வேலையின்மை, 2017 – 2018 ஆம் ஆண்டுகளில் 17.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதுபோலவே கிராமப்புற பெண்களின் வேலையின்மை 4.6 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக படித்த கிராமப்புற பெண்களின் வேலையின்மை 15.2 சதவீதத்தில் இருந்து 17.3 ஆக உயர்ந்துள்ளது.

2018-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 கோடி. இது 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட ஒரு கோடி குறைவு. தொழிலாளர் சந்தை 2018 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சிறிய முன்னேற்றம் கண்டிருந்தாலும் அதற்கு அடுத்து அக்டோபர் மாதத்தில் பெரும் சரிவை கண்டது.

NSSO-இன் இந்த ரிப்போர்ட் ஜனவரி 31 ஆம் தேதி கசிந்த நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு (ஜனவரி 28 ஆம் தேதி) NSC -இன் (நேஷனல் ஸ்டாடிஸ்டிக்கல் கமிசன்) தலைவர் பி சி மோகனன் மற்றுமொரு உறுப்பினர் ஜே மீனாட்சி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். வேலைவாய்ப்பு குறித்த நடப்பு (2018 – 2019) புள்ளிவிவரங்களை வெளியிட தங்கள் கமிசன் ஒப்புதல் அளித்தும், ஆளும் பா ஜ க அரசு தாமதித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர்கள் தங்கள் கமிசனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனவும் வருந்தினார்.

அதன்பிறகு எவ்வாறோ கசிந்த NSSO-இன் அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள் நாட்டையே உலுக்கியது. இதற்கு முந்தைய அரசுகள் ஏற்படுத்தாத அளவுக்கு தான் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து நாட்டை பொருளாதாரத்தில் முன்னேற்றி கொண்டிருப்பதாக சொல்லிவந்த பா ஜ க

மத்திய அரசின் கூற்றுகளை தகுடுபொடி ஆக்கியது மேற்கண்ட ரிப்போர்ட்.

டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, NITI ஆயோக் (மோடி அரசால் 2015 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அரசு அமைப்பு) தலைவர் ராஜீவ் குமார், “ NSSO-வின் அந்த ரிப்போர்ட் ஒரு டிராப்ட் என்றும் இறுதி ரிப்போர்ட் வெளிவந்த பிறகே துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் இப்போது கையில் இருக்கும் டிராப்ட் ரிப்போர்ட்டை 2012-2013 ஆம் ஆண்டுகளுக்கான ரிபோர்ட்டோடு ஒப்பிட்டு பார்த்து பேசுவது தவறு என்றும் கூறினார்”.

மேற்குறிப்பிட்டவாறு வேலைவாய்ப்பு குறித்த நடப்பு (2018 – 2019) புள்ளிவிவரங்களை வெளியிட மோடி அரசு தாமதித்து கொண்டே இருப்பது நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி குறித்து அவர்கள் கூறும் அத்தனை கூற்றுகளையும் சந்தேகத்திற்கு இடமாக்குகிறது என்றே சொல்லலாம்.

வேலைவாய்ப்புகள் குறித்த ஆய்வு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சரிக்கு சமமாக மோதும் காங்கிரஸ்-பா ஜ க கட்சிகளில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்ற கேள்விக்கான விடையின் முக்கியமான தீர்மானிப்பு காரணியாக இருக்கும்.

Unemployment in India 2017-2018: 45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம்

2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றிபெற வைத்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக நரேந்திர மோடி உத்திரவாதம் அளித்தார். ஆனால் நடந்து கொண்டிருப்பது அதற்கு எதிர்மாறாக உள்ளது. இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் அரசு பெரிய கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே ஊடகங்களும் வேலையின்மை பற்றி எழுதுவதை அதிகரித்து கொள்ள வேண்டும்.

தற்போதைய நாட்டின் நிலைக்கு சபரிமலை மற்றும் அயோத்தியா பற்றிய விவாதங்களை விட வேலையின்மை பற்றிய விவாதங்கள் தான் முக்கியமான தேவை என்பது மக்களின் கருத்து.

45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் 6.1% ஆக உயர்வு ! – Unemployment Rate At Worst In 45 Years; Rises To 6.1% In 2017-18

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

கடந்த ஆண்டு பிரதமர் மோடி, மாணவர்கள் தேர்வு எழுதும் போது சந்திக்கும் பிரச்னைகளை களையவும், அவர்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்தியா மட்டுமல்ல ரஷ்யா, நேபாள், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் மாணவர்களும் மோடியுடன் கலந்துரையாடுகின்றனர்.

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு இன்று கூடுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கொண்ட இக்குழு பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக்வர்மாவுக்கு பதிலாக புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய உள்ளது. மொத்தம் 12 பேர்களின் பெயர்கள் பரிந்துரையில் உள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது: முரளிதர ராவ்

மதுரை பெருங்குடி அருகே அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.க. மாநாடு நடைபெறும் இடங்களை பார்வையிட்ட தேசிய செயலாளர் முரளிதர ராவ்விடம், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது என்றார்.

மின்னணு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை: மோடி அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. ‘புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்பதை வலியுறுத்தி நடக்கும் இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘சிப்’ அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். அனைத்து இந்திய தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும் என்றார்.

ரூ.140 கோடியில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய சினிமா தேசிய அருங்காட்சியத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தியாவில் முதல் முறையாக இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் வளர்ச்சியையும் வரலாற்றையும் சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகத்தில் நூறாண்டுகளை கடந்து வந்த இந்திய சினிமா தொடர்பான வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 140 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்

கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் “ஒற்றுமை இந்தியா மாநாடு” என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான், தற்போது எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒன்றுமையாக இணைந்து செயல்பட்டால் மக்கள் விரோத கட்சியான பாஜகவை அகற்றலாம் எனக் கூறினார்.