Pravasi Bharatiya Divas

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், 90 நிமிட நடன நாடகத்தை நடத்தினார் ஹேமமாலினி

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான 3 நாள் மாநாடு வாரணாசியில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், நடிகையும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான ஹேமமாலினி “மா கங்கா” என்ற 90 நிமிட நடன நாடகத்தை நடத்தினார். நதிகள் மற்றும் அவை மாசடைந்ததை கருத்தாக கொண்டு ஹேமமாலினி நடத்திய நடன, நாடகத்தை பார்த்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்னணு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை: மோடி அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. ‘புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்பதை வலியுறுத்தி நடக்கும் இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘சிப்’ அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். அனைத்து இந்திய தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும் என்றார்.