தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது: முரளிதர ராவ்

P Muralidhar Rao

மதுரை பெருங்குடி அருகே அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.க. மாநாடு நடைபெறும் இடங்களை பார்வையிட்ட தேசிய செயலாளர் முரளிதர ராவ்விடம், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது என்றார்.