தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடங்கியதா? ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல்

election-commission-officials-seize-rs-50-lakh

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்-நாகை எல்லை காணூரில் நிரந்தர செக்ஸ்போஸ்ட்டில் நேற்று காலை போலீசார் வாகனங்களில் தீவிர சோதனையிட்டனர். அப்போது கார் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல்லை – தென்காசி சாலை அத்தியூத்தில் நடந்த சோதனையில் நெல்லையில் இருந்து வந்த காரில் ரூ.20 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.