Travel

கோவா கடற்கரை பகுதியில் மது அருந்தினால் ரூ.2000 அபராதம்; 3 மாத சிறை

இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோவாவின் கடற்கரை பகுதியை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை பகுதியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ, பாட்டில்களை உடைத்தாலோ 2000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தம் அமல் செய்யப்பட உள்ளது.

வெறும் 945 ரூபாயில் “கும்பாஹ் ஆப்பர்” ஐஆர்சிடிசி அறிவிப்பு

உத்திரபிரதேசத்தின் பிராயக்ராஜ் நகரில் வரும் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிற கும்பமேளாவை முன்னிட்டு, அங்கு பயணம் செய்யும் யாத்திரீகர்களுக்கு உதவும் வகையில் புதிய பேக்கேஜ் ஒன்றை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. கும்பாஹ் என்ற பெயர் கொண்ட இந்த பேக்கேஜ்ஜின் படி, வெறும் 945 கட்டணத்தில் கும்பமேளாவுக்கு செல்வதுடன், உத்திரபிரதேசத்தில் உள்ள பல்வேறு புனித தளங்களுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.