Tamil cricket news

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மாவின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாய் விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை சேர்த்தார். அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12 ஓவர் நிறைவு பெற்ற நிலையில் 97/2

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 12 ஓவரில் 97 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்துள்ளது. இதில் ரோகித் சர்மா அரைசதம் கடந்துள்ளார் தொடர்ந்து வெற்றிப் பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு 159 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. 159 ரன்களை இலக்காக கொண்டு தற்போது இந்திய அணி களமிறங்கியுள்ளது. தொடரை கைப்பற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் முனைப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரண்டாவது டி20 போட்டி-வெற்றிக்கான கட்டாயத்தில் இந்தியா

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆகையால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்திய அணி உள்ளது.

80 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்ததுதன் மூலம் டி20 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது நியூசிலாந்து.

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிதாலி ராஜ்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல தடைகளையும் அவமானங்களையும் சர்ச்சைகளையும் கடந்து ஜொலித்து வரும் இவர் பெண்களுக்கு ஒரு முன்னோடி. சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவரது ஓய்வு பற்றிய தகவல்கள் பரவிவரும் நிலையில் அது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்து ஓவர் நிறைவு பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97/1

97/1 மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்ரோ குருணால் பாண்டிய வீசிய ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்குப்பின் களத்திற்கு வந்த வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் செய்போர்ட் அரைச்சதத்தை கடந்து 58( 35 ) ரன்களுடன் களத்தில் உள்ளார். பத்து ஓவர் நிறைவடைந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.

நியூசிலாந்து அதிரடி ஆட்டம்

இந்தியா நியூசிலாந்து அணி முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் சற்று நேரத்திற்கு முன்பு துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 7 ஓவர் முடிவில் 74 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை கூட விடாத நிலையில் உள்ளது. தொடக்க வீரர்களான செய்போர்ட் மற்றும் முனரோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் செயபோர்ட் 24 பந்துகளில் 38 ரன்களும் முனரோ 18 பந்துகளில் 34 ரன்களை அடித்து அசத்தினார்.

விராட் உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன் – ரவி சாஸ்திரி

பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் கேப்டனாக விராட்- உம் இருக்கும் கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விராட் பற்றி பேட்டி அளித்த ரவிசாஸ்திரி, நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விராட் ஒரு அடையாளம். அவரின் தலைமை வேண்டும். அவரைப்போல உழைக்க யாரும் இல்லை. பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகரில்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். விராட் பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்ததில் விராட் பல மடங்கு முன்னேற்றம் அடைந்து விட்டார். அவர் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றதை குறிப்பிடலாம் என்று கூறினார்.

முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணையும் சகோதரர்கள் !

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – இரண்டாவது இடத்தில் இந்திய அணி!

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்த இந்திய அணி, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 111 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.