டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிதாலி ராஜ்

India Vs England Women Cricket

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல தடைகளையும் அவமானங்களையும் சர்ச்சைகளையும் கடந்து ஜொலித்து வரும் இவர் பெண்களுக்கு ஒரு முன்னோடி. சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவரது ஓய்வு பற்றிய தகவல்கள் பரவிவரும் நிலையில் அது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.