Rajinikanth

ரஜினி ஆதரவளிப்பார் என நம்புகிறேன், கமல் பேச்சு

வருகின்ற மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலிலும் நான் போட்டியிடபோவதில்லை என அண்மையில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எனவும் கூறினார். இந்த வேளையில் ரஜினி எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக்கு நம்பிக்கையுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போகிறேன், எந்த தொகுதி என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியில்லை, ரஜினிகாந்த் அறிவிப்பு

தமிழகத்தில் நடக்கவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலிலும் நான் போட்டியிடப்போவதில்லை எனவும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என 2017 ஆம் ஆண்டே ரஜினிகாந்த தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு

Rajinikanth next movie: சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகிகளாக நயன்தாராவும், கீர்த்தி சுரேஷும் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ரஜினி கமல் கூட்டணி வைக்க வேண்டும் விஷால் கருத்து

தமிழக நலன் கருதி கமலும் ரஜினிகாந்த் அவர்களும் ஒன்று சேர்ந்து அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்தோடு கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு கமல் ஹாசன் “ரஜினி கட்சி ஆரம்பித்த பின்பு பார்ப்போம்” என கூறியுள்ளார்.

கமலை மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடப் போகும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரஜினிகாந்த் “கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யதின் தலைவர் என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு

Vijayakanth: தனது சிகிச்சை நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விஜயகாந்த் பூரண நலம் பெற்று வரும் இந்த சமயத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

Lok Sabha Elections 2019: நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது

Rajinikanth won’t contest 2019 Lok Sabha elections: இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு” என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை; எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படம் மற்றும் மன்றத்தின் கொடியை வைத்து எந்த கட்சியும் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மகள் திருமணம் – குவியும் பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடியை இன்று மணந்தார். இவர்களது திருமணம் சென்னை லீலா பேலஸில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ம தி மு க பொது செயலாளர் வைகோ, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல ஹாசன் என அரசியல் பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

ரஜினி , திருமாவளவன் திருநாவுக்கரசர் சந்திப்பு

வருகின்ற மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அண்மையில் திருமாவளவன் ரஜினிகாந்த் ஆகியோர் திருநாவுக்கரசரின் இல்லத்திற்கு வந்து அவரை நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த ரஜினி தனது படங்களில் பிசியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் திமுகவோடு இணக்கமான சூழலில் இருக்கும் தருணத்தில் ரஜினி அவர்களை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமிர்த்தமான சந்ததிப்பு எனவே கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் படத்தை தயாரிக்க பின்வாங்கும் முக்கிய நிறுவனங்கள்

தமிழ் சினிமாவின் மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான், அவர் அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணைகிறார். இதற்கான வேளைகளில் இயக்குனர் முருகதாஸ் இறங்கி படு வேகமாக பணிகளை முடித்து படபிடிப்புக்கு தயாரிகிவிட்டார். இருந்தும் இந்த படத்தை தயாரிப்பதாக சொன்ன லைக்கா நிறுவனம், சன் பிக்சர்ஸ் இரண்டும் பின் வாங்கிவிட்டது. அடுத்தாக இருப்பவர் கலைபுலி தாணு தான், அவரும் இன்னும் சம்மதம் சொல்லவில்லை என்று தெரிகிறது. இந்த நிறுவனங்கள் பின்வாங்குவதற்கான காரணம் தெரியவில்லை.

மாஸான போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ள ரஜினிகாந்த்

கொடி பறக்குது, மூன்றுமுகம், பாண்டியன் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது, மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படம், ஒரு மாஸான போலீஸ் படமாக இருக்கும் என்று தெரிகிறது. இது அலெக்ஸ் பாண்டியன், மிஸ்டர் ரைட் போன்ற கேரக்டர் போன்று மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் மாப்பிள்ளை புகைப்படத்துடன் திருமண தேதியும் வெளியானது

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்து, பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, 2-வதாக திருணம் செய்ய உள்ளார். அடுத்த மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார். விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்-ன் உயரிய கோல்டன் ரீல் விருதுக்கு ரஜினியின் 2.0 பரிந்துரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியாகி 713 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்த 2.0 திரைப்படம் புகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒலித் தொகுப்பு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கும், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் 2.0 படம் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோசன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் அமைப்பின் இறுதி பரிந்துரை பட்டியலில் இந்த படத்திற்கு இடம் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில்நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் பேட்ட, விஸ்வாசம் ரூ.200 கோடி வசூல் செய்யும்: பிரபல விமர்சகர் கருத்து

பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. வசூலில் தமிழகத்தில் விஸ்வாசமும், மற்ற இடங்களில் பேட்ட படமும் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, பேட்ட, விஸ்வாசம் 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், இரண்டு படங்களும் சேர்ந்து தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்றார்.

விஸ்வாசம் அதிகாரப்பூர்வ தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் வெளியீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ந் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியானது. இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ரஜினியின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சிறிது நேரத்தில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே அறிவிப்பார்: திருப்பதியில் நடிகர் தனுஷ் பதில்

நடிகர் தனுஷ் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற கல்யாண உற்சவ சேவை தரிசனத்தில் கலந்து கொண்டு அவர் ஏழுமலையானை தரிசித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் தனுஷிடம், வரும் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுகிறாரா அல்லது கூட்டணி அமைக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே அறிவிப்பார் என்றார்.

அன்று அம்மாவுடன்… இன்று மகளுடன்… ஜோடியாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இயக்குனர் முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் அரசியல் சார்ந்த படம் என்று கூறப்படுகிறது. ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முடிவு ஏ. ஆர். முருகதாஸ் முடிவு செய்துள்ளார். அன்று இவரின் அம்மா மேனகாவுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்தார் இன்று மகள் கீர்த்தி சுரேஷ்வுடன் நடிக்க இருக்கிறார். முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வர் ஆவது போன்று காட்சிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Petta Movie Review: “பேட்ட” ஒரு வசூல் “வேட்ட”

Petta Tamil Movie Review
Banner Sun Pictures
Cast Rajinikanth, Vijay Sethupathi, Nawazuddin Siddiqui, Sasikumar, Simran, Trisha Krishnan, Megha Akash, Bobby Simha, Y.G. Mahendran
Direction Karthik Subbaraj
Production Sun Pictures
Music Anirudh Ravichander

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளமை துள்ளலான தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமே பேட்ட. நண்பன் குடும்பத்தை கொலை செய்தவர்களை தன் உயிரையே பணயம் வைத்து பழிக்கு பழி வாங்கும் நண்பன் கேரக்டரில் நடித்துள்ள ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

மலைப்பிரதேச பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்ற பெரிய இடத்து பிள்ளை பாபி சிம்ஹா. அவர் டேஸ்காலர் என்றாலும் , கல்லூரி ஹாஸ்டலையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் ஜுனியர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார். இந்த கல்லூரியில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து முதல் ஆண்டில் சேர்ந்து படிக்கும் இளம் லவ்வர்ஸ் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் கூட பாபியின் ராகிங்கில் சிக்கி வருத்தமான சூழலில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு, மினிஸ்டர் ரெக்க மென்டேஷனில் வார்டனாக ரஜினிகாந்த் வருகிறார். பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, அவரை கல்லூரியிலும் சஸ்பென்ட் செய்ய வைத்து, அவரது அப்பா ‘ஆடுகளம்’ நரேனின் கல்லூரி கேன்டீன் மற்றும் ஹாஸ்டல் மெஸ் கான்ட்ரக்ட்டையும் ரத்து செய்து, கல்லூரி ஹாஸ்டலையே தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார்.

இப்படி, காளி – ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபியும் அவரது அப்பா ஆடுகளம் நரேனும், சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணி ஒரு நாள் ஆட்களை அனுப்புகிறார்கள். அதே நாளில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நவாசுதீன் சித்திக்கும் அவரது மகன் விஜய் சேதுபதியும் ஆட்களை அனுப்பி, சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, பாபி சிம்ஹா அன்ட் கோவினருடன் கைகோர்த்துக் கொண்டு சனத் ரெட்டியை எப்படி காப்பாற்றுகிறார்? தனது மதுரை கோட்டையை பேட்டயை விட்டுவிட்டு வெறும் ஹாஸ்டல் வார்டனாக மினிஸ்டர் சிபாரிசில் வரும் ரஜினி, ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? இவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் …? படத்தில் சசிக்குமாரின் ரோல் என்ன ..? அதன் பின்னணியில் ? நடந்தது என்ன ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது பேட்ட படத்தின் மீதி கதை.

ரஜினி. படம் முழுக்க பாயும் புலியாக காளியாக, பேட்ட வேலனாக பக்கா மாஸ் காட்டியிருக்கிறார். படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை அழகாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். 80களின் ரஜினியை பார்க்க ஆசைப்பட்டோருக்கு இந்த படம் ஒரு தலைவாழை இலை விருந்து எனலாம். மதுரை கிராமத்து கெட்-அப், இளமையான முறுக்கு மீசை தோற்றம், நடுத்தர வயது ஹாஸ்டல் வார்டன் என அசத்தியிருக்கிறார் ரஜினி.

சிம்ரன், திரிஷா இருவருமே ரஜினி ஜோடியாக முதல்முறையாக திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் ரொம்ப நாளுக்கு அப்புறம் தன் நடை, உடை, பாவனை மற்றும் நடனத்தில் ரசிகர்களின் இதங்களை ரொம்பவே ஈர்க்கிறார்.

விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் இருவருமே பழிக்கு பழி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் இஸ்லாமிய நண்பராக, மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார் சசிகுமார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம், இவர் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார் எனலாம்.

மொத்தத்தில் “பேட்ட” ஒரு வசூல் “வேட்ட” என்றே சொல்லலாம்.

இப்படி ஒரு படம் தான் வேண்டும் என்பது தீவிர ரசிகர்களின் வேண்டுகோள்.