Puducherry Chief Minister V Narayanasamy

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் புதுவை முதல்வர் கருத்து

மக்களவைத் தேர்தல் நடைபெறும் அன்றே பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இந்த 18 தொகுதிகளுக்கான தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி 10 தொகுதிகளுக்கு மேல் வென்றால் அது பெரிய விஷயம் எனவும் குறிப்பிட்டார்.

புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தேர்வு

Puducherry: திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது . புதுவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தத் தொகுதியின் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிகளின் விதிமுறைகள் தற்போதைய எம்எல்ஏக்கள் யாரும் போட்டியிடகூடாது என்பதுதான் இருப்பினும் விதிகளில் தளர்வு செய்து இவரை போட்டியிடுவார் எனவும் தெரிகிறது

Puducherry News in Tamil: தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலனுக்காக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 39 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கிரண் பேடியின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்து பேசினார்.பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தங்களது கோரிக்கைகளுக்கு கிரண் பேடி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதனால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.

Puducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி

Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி பேசியதாவது புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது என பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடுவது சரி அல்ல என்றார். புதுச்சேரியில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கிரண்பேடியை மோடி தூண்டிவிடுகிறார் என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.