ODI

ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 252 ரன்களை எடுத்தது. போட்டியை வெல்லும் முனைப்போடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 90 ரன்கள் விளாசிய ராயுடு ஆட்ட நாயகன் விருதையும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமத் ஷமிக்கு தொடரின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, நியூசிலாந்து அணி 32 ஓவர்களில் 136/6

இந்தியா – நியூசிலாந்து கிரிகெட் அணியில் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராய்டு 90 ரன்கள் அடித்தார். 253 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய பந்து வீச்சாளர்களில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், பாண்டேயா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 200வது போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகள் இடையேயான 5-வது ஒருநாள் போட்டி வரும் 3-ம் தேதி நடக்க உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 92 ரன்களில் இந்தியா ஆல் அவுட்

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது.

ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார்? தென்ஆப்பிரிக்காவா? பாகிஸ்தானா?

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று மாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.

3-வது ஒருநாள் போட்டி: 18 ஓவரில் 80/1 ரன்களை இந்தியா

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கோலி 17 ரன்களுடனும், ரோகித் சர்மா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து பேட்ஸ்மேன் டைலர் 93 ரன்கள் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் சமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், சாஹல், பாண்டேயா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றுது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடினர். இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்

நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இசைஎயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடைசியாக அங்கு சென்று விளையாடிய தொடரில் இந்தியா 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து மண்ணில் விளையாடிய 35 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 10ல் மட்டுமே வென்றுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வரலாற்று சாதனை படைத்தது இந்தியா

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய இந்திய பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

3-வது ஒரு நாள் போட்டி: 230 ரன்களில் ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி போட்டி இன்று மெல்பரன் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியல் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 48.4 ஓவர்களில், 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் முதல் முறையாக களமிறங்கும் தமிழக வீரர்

மெல்பேர்னில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் முதல் முறையாக களம் இறங்க உள்ளார். இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.