Manohar Parrikar

கோவா முதல்வர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடம்

கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பாரிக்கருக்கு உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக அம்மாநிலத்தின் துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் பாரிக்கர் தொடர் சிகிச்சையில் உள்ளார் .கடந்த 30 ஆம் தேதி மூக்கில் குழாய் மாட்டியதோடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்க பட்டுள்ளார். தற்போது கோவா முதலமைச்சர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக துணை சபாநாயகர்
கூறியுள்ளார்.

கோவா கடற்கரை பகுதியில் மது அருந்தினால் ரூ.2000 அபராதம்; 3 மாத சிறை

இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோவாவின் கடற்கரை பகுதியை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை பகுதியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ, பாட்டில்களை உடைத்தாலோ 2000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தம் அமல் செய்யப்பட உள்ளது.