India News

மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – கைலாஷ் விஜய்வர்ஜியா

சாரதா சிட்பண்ட் விவகாரம் குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்றதை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா, மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக மம்தா பதவி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட் பிரச்சினை விசாரணைக்கு மாநில அரசும் போலீசாரும் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் எனக் கூறினார்.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

நரேந்திர மோடி ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன் – ஸ்ம்ரிதி இரானி

புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் “நீங்கள் எப்போது பிரதமர் ஆவீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “எனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை. சிறந்த தலைவர்களின் தலைமையின் கீழ் அரசியல் பணி செய்வதே என் விருப்பம். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பார். அவர் ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன்” என்று பி ஜே பி – எம் பி ஸ்ம்ரிதி இரானி கூறியுள்ளார்.

தபால் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் சுமார் 9,000 கோடி ரூபாய்!

ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்காக சிறு தொகைகளை சேமிக்க தபால் நிலையங்களை பயன்படுத்துகின்றனர். இதனிடையே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேர்த்து சுமார் 9,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் இருப்பதாக மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள் ஆன கிசான் விகாஸ் பத்திரம், மாத வருவாய் திட்டம் ,தேசிய சேமிப்பு பத்திரம், PPF, RD உள்ளிட்டவைகளில் இந்த நிதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் ஆகும் #WestBengalWantsPresidentRule

சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் கைது செய்யபட்டதை தொடர்ந்து சி பி ஐ-இன் செயலை எதிர்த்தும் பா ஜா க அரசு தன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற கட்சி தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. ட்விட்டரில் #WestBengalWantsPresidentRule என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி

மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் கொல்கத்தா மாநில முதலைச்சர் மம்தா, மாநில உரிமைகளை தட்டி பறிக்கும் வகையிலும் , மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவதாக குற்றம் சாட்டினார், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் “ மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை என்று பதிவிட்டுள்ளார்.

எங்கள் கட்சியை எதிர்க்கவே மம்தா மகாகத்பந்தன் அமைப்பை உருவாக்கியுள்ளார்: ராஜ்நாத்சிங்

மாநிலத்திற்காக செலவிடும் நேரத்தை மம்தா பானர்ஜி குறைத்து கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள மகாகத்பந்தன் அமைப்பு பாஜகவை எதிர்ப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உலக முதலீட்டாளர்களை அழைப்பதற்காக உலக வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது என்றார்.

கொல்கத்தா போலீசை விசாரிக்க வந்த சிபிஐ – மம்தா கண்டனம்

கொல்கத்தாவில் பண மோசடி செய்தவர்களுக்கும் காவல் ஆணையர் ராஜீவிற்கும் தொடர்புள்ளாதாக கூறி சிபிஐ அதிகாரிகள் அவரை விசாரிக்க அவரது வீட்டிற்கு வந்துள்ளனர், ஆனால் அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது, இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா, இது பாஜக அரசு செய்யும் சதி எனவும், கொல்கத்தாவில் அராஜகத்தை மோடி அரசு கட்டவிழ்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு 73,000 நவீன ரைபிள் துப்பாக்கிகள் வாங்க இந்தியா முடிவு

எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகள் வழங்க இந்திய பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து ”சிக் சயர்” ரக துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த துப்பாக்கிகள் இந்தியா – சீனா இடையே உள்ள 3,600 கி.மி எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ”சிக் சயர்” துப்பாக்கிகளை தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகிறார்கள்.