ட்ரெண்டிங் ஆகும் #WestBengalWantsPresidentRule

WestBengalWantsPresidentRule

சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் கைது செய்யபட்டதை தொடர்ந்து சி பி ஐ-இன் செயலை எதிர்த்தும் பா ஜா க அரசு தன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற கட்சி தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. ட்விட்டரில் #WestBengalWantsPresidentRule என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.