கீழே விழுந்த புகைப்பட கலைஞருக்கு ஓடிச்சென்று உதவிய ராகுல் காந்தி, டுவிட்டரில் பாராட்டு

Rahul Gandhi Helps Falling Photographer

ஒடிசாவில் இன்று 2019 தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக தொடங்கியுள்ளார். புவனேஷ்வர் விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பின்னால் படிகள் இருப்பதை பார்க்காமல் பின்னால் சென்ற வண்ணமே புகைப்படம் எடுத்தபடி, எதிர்பாராத விதமாக தலைகீழாக விழுந்தார். இதை பார்த்து ராகுல் காந்தி உடனடியாக ஓடிச்சென்று அவர் தூக்கி விட்டார். அவருடைய மனிதாபிமான பணியை பாராட்டி பலரும் டுவிட்டரில் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியினர் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்