கேரளா கோவிலில் பாரம்பரிய உடையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி

Narendra Modi

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில், சுதேசி வழிபாடு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். உள்ளூர் மக்களை கொண்டே, கோவில்களை மேம்படுத்தும் 92.22 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தின் படி, பத்மநாபசுவாமி திருக்கோவில், சபரிமலைகோவில், ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.