Prime Minister Narendra Modi

தூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியாக இருக்கலாம் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் பாஜகவு தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “தூத்துக்குடி தொகுதியை எங்களுக்குத் தர வேண்டும் என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், கட்சி மேலிடம் சம்மதித்தால் நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன் என தமிழிசை கூறியுள்ளார்.

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம், என்ன பேசினார் மோடி?

இந்திய நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உட்பட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தமிழகத்தில் திமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது எனவும் கூறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூறித்தும் பேசினார்.

பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள்

  • தமிழகம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.
  • மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்தார்.
  • இலங்கை கடற்படையிடம் சிக்கி கொண்ட 1900 மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொடுத்துள்ளதையும் கூறிப்பிட்டார்.
  • இது போன்ற விஷயங்களை குறிப்பிட்ட பிரதமர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது தனது வெறுப்புகளை வெளிப்படுத்த மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கை எடுத்துவருகிறது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். எதிர்கட்சிகளின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் என்னை சோர்வடைய செய்யாது என்றார். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். நிறைவாக பேசிய பிரதமர் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வாசகத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

    மீண்டும் வருவாரா மோடி ?

    பிரதமர் மோடி பாஜக பொதுகூட்டங்களில் கலந்து கொள்ள மீண்டும் தமிழகம் வருவார் என்று பாஜக பிரதிநிதிகள் தகவல் சொல்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கான துள்ளியமான பதிலை மக்கள் மிக விரைவில் தெரிவிப்பார்கள்.

    மீண்டும் வருமா பாஜக அல்லது மீண்டு வருமா காங்கிரஸ், மக்களவை தேர்தலில் மக்களின் பதிலுக்காக காத்திருப்போம்.

    உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? ஓபிஸ் கேள்வி

    அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஸ், எதிர்கட்சியினரை பார்த்து “உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என உங்களால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கூட்டணி விஷயத்தில் அவர் என்ன செய்திருப்பாரோ, அவரது தீவிர விஸ்வாசியாகிய நாங்களும் அதனையே செய்துள்ளோம் என்றார்.

    சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் – மோடி அறிவிப்பு

    அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உட்பட பல கட்சித் தலைவர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மேலும் பேசிய பிரதமர் தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தகவல்கள் தமிழில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார், இறுதியில் “நாற்பதும் நமதே நாடும் நமதே” என கூறி உரையை நிறைவு செய்தார்.

    நாளை சென்னை வருகிறார் மோடி

    Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

    PM Modi visit to Kanyakumari: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்குமுன் மதுரையிலும் திருப்பூரிலும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அதேபோல் மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆறாம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பார் எனவும் தெரிகிறது.

    மார்ச்சில் ஈரோடு வருகிறார் பிரதமர் மோடி

    Modi in Erode: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் மாபெரும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான அதிமுக பாமக போன்ற கட்சிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

    Puducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

    புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் குதித்துள்ள நாராயணசாமி அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே தர்ணா போராட்டம் நடத்துகிறார் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வரை சந்தித்து பேச தயாராக உள்ளேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது – பாலகிருஷ்ணன்

    கரூரில் பேசிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடு உடைய மோடி நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திட்டங்களை துவக்கி வைப்பதன் நோக்கம் என்ன? அவை அனைத்தும் கையூட்டு திட்டங்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது என்று கூறினார்.

    Puducherry Breaking News: பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிடுவதாக புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

    புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை கண்டித்துதான் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என புதுவை முதல்வர் கூறியுள்ளார் மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிட்டு அரசியல் குழப்பத்திற்கு வழிவகுக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்

    ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

    2019 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்திற்கு 3534 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிலையில் இதுவரை ஹஜ் பயணத்திற்காக 6379 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் யாத்திரையில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதால் கூடுதலாக 1,500 ஹஜ் பயண ஒதுக்கீட்டை அளிக்குமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

    மோடி பாகிஸ்தான் பிரதமர் போல செயல்படுகிறார் – அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்பொழுது பேசிய கெஜ்ரிவால், “சி பி ஐ போலீசாரை தன் கைக்குள் வைத்துக்கொண்டு பா ஜ க ஆட்சியில் அல்லாத மாநிலங்களிடம் பாகிஸ்தான் பிரதமர் போல மோடி நடந்து கொள்கிறார்” என்று கூறினார்

    தொகுதி பங்கீட்டில் இழுபறியா ?

    மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார், அது ஒருபக்கம் இருந்தாலும் திரைக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே கூட்டணியோடு தான் தேர்தலில் ஈடுபட உள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் தேர்தலை அணுக இருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

    கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எளிதில் நிறைவு பெறாததற்கு, தொகுதி பங்கீடும் ஒரு இடையூறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, முந்தைய தேர்தல் சமயத்தில் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாததனால் கூட்டணியே முறிவடைந்துள்ளது. எடுத்துகாட்டாக 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்தை நல்ல முடிவு எட்டப்பட்டாலும் தொகுதிகள் குறைவு என்பதற்காக வெளியேறிய தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் நலக் கூட்டணியோடு இணைத்து கொண்டது. அதே நிலைதான் தமிழகத்திலும் நிலவுவது போல் தெரிகிறது.

    திமுக பொருத்தவரை இம்முறை மெகா கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது.. அதிமுகவை பொருத்தவரை தேசிய கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறினாலும் பாஜகவுடனான கூட்டணிக்கே அதிக வாய்ப்பு என்பதை அரசியல் நிகழ்வுகள் தெரியப்படுத்துகிறது

    இன்னும் சில

    தமிழக கட்சிகளில் இன்னும் சில கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ் மேலும் சில உள்ளூர் கட்சிகளும் முடிவை அறிவிக்காமல் இருக்கின்றன.

    எங்களுக்கு இந்த தொகுதி

    பொதுவாகவே தொகுதி பங்கீட்டில ”’எத்தனை தொகுதி” என்பதை விட ”எந்த தொகுதி” என்பதே சலசலப்பை ஏற்படுத்தும், சில கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வரவேற்பு இருக்கும், ஆகையால் அவர்கள் அங்கே போட்டியிட நிர்பந்திப்பது வழக்கம், அதற்கு கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதுபோல் பல்வேறு பிரச்சனைகள் குறுகிய காலத்தில் தலைதூக்கும், இதனை சமாளித்து தேர்தலை சந்திப்பது எளிதல்ல.

    தற்போதைய நிலையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தான் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    யார் யாருடன் கூட்டணி ! இன்னும் சில தினங்களில் !

    மோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுக தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்

    நேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார். அந்த வகையில் நேற்று திருப்பூரில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், மேலும் திருப்பூரில் நடைபெற்ற தமிழக அரசின் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் அவர் திறந்து வைத்தார், பாஜக பொதுகூட்டதில் பேசிய மோடி காமராஜர் ஆசை பட்ட ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்று கூறிப்பிட்டார்

    தமிழக அரசியலில் பிரதமர் மோடியின் வருகை எதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு வரலாறே பதில் சொல்லும் பிரதமர் மோடி பல முறை தமிழகம் வந்திருந்தாலும் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை என்பதே நிதர்சனம். மக்களவை தேர்தலை நோக்கி நாம் பயணிக்கும் இந்த தருணத்தில் மோடியின் வருகை முக்கியதுவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது, கூட்டணி குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபட்டது, ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை தமிழக மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும், தொழிலாளர்கள் நலம் சார்ந்த திட்டங்களை மட்டுமே எங்கள் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது, மேலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம் பாதுகாப்பு தளவாடங்களில் நம் நாடு தன்னிறைவு அடைய இரண்டு பாதுகாப்பு பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று தமிழகத்தில் தான் அமையவுள்ளது என்றார் மோடி. சகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்கள் பலப்படுத்தப்படும் எனவும், ஊழல் மற்றும் தவறான செயல்ளை எங்கள் அரசு தடுத்து நிறுத்தும் என்றார் பிரதமர் மோடி. குறிப்பாக சாலை மேம்பாடுகளில் அரசு கவனம் செலுத்தும் எனவும் உறுதியளித்தார்

    காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளது காங்கிரஸ். நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டாமல் தற்போதிய ராணுவத்தை சிறுமைபடுத்தும் வகையிலும் பேசிவருகிறது காங்கிரஸ் கட்சி. பிரச்சாரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினரின் கேலி பேச்சுகளை கேட்க மக்கள் தயாராக இல்லை என்று காங்கிரஸை விமர்சித்தார், மேலும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு இப்போது பேக்கேஜ் முறையில் ஒரு குடும்பம் ஜாமின் வாங்கி வருகிறது என மறைமுகமாக பா.சிதம்பரத்தை விமர்சித்தார். பிரதமரின் தமிழகம் வருகை பாஜகவின் வாக்கு வங்கியில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தேர்தல் முடிவுகள் தான் தெரியப்படுத்தும்.

    அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19 அன்று பிரதமர் பிரச்சாரத்திற்க்காக கன்னியாக்குமரி செல்கிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

    இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை

    மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை ஒட்டி இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தமிழகத்திற்கு வரும் அவர் திருப்பூரில் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாது பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க இருக்கிறார் . அதில் சென்னை டி எம் எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்? – மோடி கேள்வி

    தமிழகம் வந்த பிரதமர் மோடி திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “கலப்பட மருந்தை போன்று ஆபத்தானது கலப்பட கூட்டணி. எதிர்க்கட்சிகளின் கலப்படமான கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள். என்னை தோற்கடிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    அரசியல் திருப்பத்தை எற்படுத்துமா திருப்பூர் வருகை ?

    மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு திருப்பூர் பிரச்சாரம் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று திருப்பூர் வருகிறார். அதோடு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் மோடி..

    மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரதமர் கோவை வந்தடைகிறார்.. பின் 3.05 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்கிறார்.

    அரசு விழாவில் டிஎம்ஸ்-வண்ணாரபேட்டை வழிதடத்தில் மெட்ரோ சேவை, விமான நிலைய புனரமைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சபாநாயகர் தனபால் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

    அதன் பின்னர் 3.25 மணிக்கு பாஜக பொது கூட்டம் நடைபெறும் பெருமாநல்லூர் வருகிறார். அங்கு மாபெரும் பொதுகூட்ட மேடை அமைக்கபட்டுள்ளது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி பிரமுகா்கள் கலந்துகொள்ள உள்ளனா். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். பின் 5.10 மணிக்கு புறப்பட்டு பிரதமர் மோடி கோவை வழியாக கர்நாடகா செல்வார் என தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    பிரதமர் மோடி வருவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகம் தமிழக பாஜக தலைவர் கூறுவகையில் மோடி தமிழகம் வருவதால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் மோடி சுற்றுபயணம் மெற்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் தமிழகம் வருவதையொட்டி டிவிட்டரில் ‘’GO BACK MODI” மீண்டும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடதக்கது.

    இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை

    மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை ஒட்டி இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தமிழகத்திற்கு வரும் அவர் திருப்பூரில் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாது பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க இருக்கிறார் . அதில் சென்னை டி எம் எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை குறிப்பிடத்தக்கது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் – தேவசம் போர்டு ஒப்புதல்

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு சபரிமலை தேவசம் போர்டு ஒப்புக்கொண்டுள்ளது. இத்தனை நாட்கள் பின்பற்றி வந்த தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாகவும் தேவசம்போர்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

    மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – கைலாஷ் விஜய்வர்ஜியா

    சாரதா சிட்பண்ட் விவகாரம் குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்றதை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா, மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக மம்தா பதவி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட் பிரச்சினை விசாரணைக்கு மாநில அரசும் போலீசாரும் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் எனக் கூறினார்.

    சர்ச்சையான சபரிமலை தீர்ப்பு – மறுசீராய்வு மனு இன்று விசாரணை

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இருந்த தடையை நீக்கி அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. அதிலிருந்து சபரிமலை தன் இயல்பு நிலையை இழந்து விட்டது. பல பெண்களின் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு இரண்டு பெண்கள் மட்டும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து விட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல பெண்கள் சென்று வந்து விட்டார்கள். இந்த விவகாரம் ஒருபுறமிருக்க, அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் கீழ் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளது.

    மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

    காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

    நரேந்திர மோடி ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன் – ஸ்ம்ரிதி இரானி

    புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் “நீங்கள் எப்போது பிரதமர் ஆவீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “எனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை. சிறந்த தலைவர்களின் தலைமையின் கீழ் அரசியல் பணி செய்வதே என் விருப்பம். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பார். அவர் ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன்” என்று பி ஜே பி – எம் பி ஸ்ம்ரிதி இரானி கூறியுள்ளார்.

    ரூ.140 கோடியில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய சினிமா தேசிய அருங்காட்சியத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்தியாவில் முதல் முறையாக இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் வளர்ச்சியையும் வரலாற்றையும் சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகத்தில் நூறாண்டுகளை கடந்து வந்த இந்திய சினிமா தொடர்பான வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 140 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    பயம் இல்லை எனக்கூறிய மோடி.. நம்மை பார்த்து பயப்படுகிறார்: ஸ்டாலின்

    கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் மெகா சங்கமம் “ஒற்றுமை இந்தியா மாநாடு” என்று பெயரில் நடந்து வருகிறது. மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான், தற்போது எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், ஒன்றுமையாக இணைந்து செயல்பட்டால் மக்கள் விரோத கட்சியான பாஜகவை அகற்றலாம் எனக் கூறினார்.

    கேரளா கோவிலில் பாரம்பரிய உடையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில், சுதேசி வழிபாடு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். உள்ளூர் மக்களை கொண்டே, கோவில்களை மேம்படுத்தும் 92.22 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தின் படி, பத்மநாபசுவாமி திருக்கோவில், சபரிமலைகோவில், ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.