ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை: வருமான வரித்துறை

Jayalalithaa House

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவுத்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையின் முடக்கப்பட்ட பட்டியலில் உள்ளது என்றும், முடக்கத்தில் இருந்தாலும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.