ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு மறுப்பு

Sterlite plant-pollution control

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக உரிமத்தை புதுப்பிக்க 2-வது முறையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது. தூத்துக்குடியில் கடந்த மே 22-ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த மே 28-ல் தமிழக அரசு சீல் வைத்தது. பின்னர், டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் அரசின் உத்தரவை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.