மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Jayalalithaa memorial

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு மெரினாவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவிடம் அமைக்க தடை கோரி, ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தள்ளுபடி செய்தனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிபதிகள், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.