தமிழகத்தில் 500 புதிய பேருந்து தொடங்கி வைத்தார் பழனிச்சாமி

cm-inaugrated-500-new-buses-launched

தமிழக போக்குவரத்துத் துறைக்கு ரூபாய் 133 கோடியில் வழங்கப்பட்ட 500 புதிய பேருந்து இயக்கத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒரு கோடியே 74 லட்சம் பேர் தினமும் பயணிக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 8 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல நவீன வசதிகள் கொண்ட பேருந்துகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார்.